இந்தியா

புதிய கார் வாங்கினால் இரண்டு உருளைக் கிழங்குகள் பரிசாம்! அடடே!

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்புரைச் சேர்ந்த ஒருவர், தான் கார் வாங்கியதற்கு பரிசாக 2 உருளைக் கிழங்குகளை அளித்த கார் டீலர் மீது காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளார். 

ENS

ஜகத்சிங்புர்: ஒடிசா மாநிலம் ஜகத்சிங்புரைச் சேர்ந்த ஒருவர், தான் கார் வாங்கியதற்கு பரிசாக 2 உருளைக் கிழங்குகளை அளித்த கார் டீலர் மீது காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளார்.

கிஃப்ட் பாக்ஸ் ஒன்றில் இரண்டு உருளைக் கிழங்குகளை வைத்து தங்களுக்கு அளித்த கொரியர் நிறுவனத்தின் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரகுநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஸவர்தன், கட்டாக்கில் உள்ள ஸ்கை ஆட்டோமொபைல்ஸில் மாருதி ஆல்டோ கார் வாங்கியுள்ளார். அன்றைய தினம் கார் வாங்குபவர்களுக்கு சிறப்புப் பரிசு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த போட்டியில் ஹர்ஸவர்தன் பங்கேற்று 4ஜி சாம்சங் செல்போனை பரிசாகப் பெற்றுள்ளார்.

அவரது முகவரிக்கு விரைவில் 4ஜி சாம்சங் போன் அனுப்பி வைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஹர்ஸாவர்தனை தொடர்பு கொண்ட டிடீடிசி கொரியர் நிறுவனம், பரிசுப் பெட்டியை நேரடியாக அலுவலகத்துக்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பரிசுப் பெட்டியை வாங்கிய ஹர்ஸவர்தனுக்கு பேரதிர்ச்சிக் காத்திருந்தது. அந்த பெட்டியில் செல்போனுக்கு பதிலாக 2 உருளைக் கிழங்குகள் தான் இருந்தன.

இதையடுத்து, காவல்நிலையத்தில் கார் டீலர்கள் மற்றும் கொரியர் நிறுவனம் மீது ஹர்ஸவர்தன் புகார் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT