தமிழ்நாடு

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

தினமணி

கொடைக்கானலில் மழை குறைந்ததால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இங்கு வியாழக்கிழமை பலத்த மழையும், வெள்ளிக்கிழமை பல இடங்களில் மிதமான மழையும் பெய்தது. பின்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மழை இல்லாமல் மேகமூட்டமும் குளிரும் நிலவியது.

இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. சுற்றுலா இடங்களான வெள்ளிநீர் வீழ்ச்சி, மோயர்பாயிண்ட், பில்லர் ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, மியூசியம், பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர்.

மேலும் மாலை நேரத்தில் குளிரையும் பொருள்படுத்தாமல் அவர்கள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

நிழற்குடைகள் அமைக்க கோரிக்கை: கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களில் மழை பெய்யும் போது ஒதுங்க நிழற்குடை இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே அங்கு நகராட்சி மற்றும் வனத்துறை பகுதிக்கு சொந்தமான இடங்களில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT