கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள் 
தமிழ்நாடு

கொடைக்கானலுக்குக் கிளம்பிட்டீங்களா.. ஒரே கொண்டாட்டம்தான்!

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் தொடர் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகளும்,  விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

DIN

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் தொடர் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகளும்,  விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

எனவே, இங்கே மழையில்லாமல் வறண்ட வானிலையாக இருக்கிறதே என்று கவலையோடு கொடைக்கானல் கிளம்பிய சுற்றுலாப் பயணிகளுக்கு அங்கு மழை சிறப்பான வரவேற்பு அளித்துள்ளது.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது சாரலும், மிதமான மழையும் பெய்தது. அதிலும் கடந்த இரண்டு நாள்களாக கொடைக்கானல், செண்பகனூர், பிரகாசபுரம், அட்டக்கடி, இருதயபுரம், வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. 

இது, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி உள்ளிட்டவைகளின் விளைச்சலுக்கு ஏற்ற மழையாக இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த சாரல் மழையிலும் படகு சவாரி செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மேக மூட்டமும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் வழக்கத்தை விட குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. கடந்த 2 நாள்களாக வாரவிடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மேகமூட்டமும், சாரலும் நிலவி வந்தது. 
இந்த சூழ்நிலையில் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். தொடர்ந்து பிற்பகலில் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. 

இந்த மழையால் பொது மக்களும் ,சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.  நீரோடைகளிலும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.  இதனால் புறநகர்ப் பகுதிகளில் தண்ணீர் பிரச்னை குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

மேலும் கொடைக்கானல் புறநகர்ப் பகுதிகளில் தண்ணீர் பிரச்னை இருந்து வந்தது. கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழையின் காரணமாக நீரோடைப் பகுதிகளிலும், நீர்வரத்து பகுதிகளிலும் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் சற்று குடிநீர் பிரச்னை குறைந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT