முகப்பு
அரசியல் அரங்கம்

காட்டேரியும் குட்டிச்சாத்தானும்

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 2-ம் தேதி பா.ம.க. பொதுக்குழுக் கூடியது. இதில், கூட்டணி குறித்து முடிவு எடுக்க ராமதாஸýக்கு அதிகாரம் அளித்து சம்பரதாய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  நல்ல வேளை, கடந்

அரசியல் அரங்கம்

காட்டேரியும் குட்டிச்சாத்தானும்

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 2-ம் தேதி பா.ம.க. பொதுக்குழுக் கூடியது. இதில், கூட்டணி குறித்து முடிவு எடுக்க ராமதாஸýக்கு அதிகாரம் அளித்து சம்பரதாய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  நல்ல வேளை, கடந்

Updated On : 28 ஜூலை, 2025 at 4:06 AM
பகிர்:

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 2-ம் தேதி பா.ம.க. பொதுக்குழுக் கூடியது. இதில், கூட்டணி குறித்து முடிவு எடுக்க ராமதாஸýக்கு அதிகாரம் அளித்து சம்பரதாய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 நல்ல வேளை, கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தியது போன்ற நாடகம் எதுவும் இப்போது நடைபெறாது என்று கூறி பா.ம.க.வினர் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்களாம்.

ஆனால் இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் அய்யாவும், சின்ன அய்யாவும் இன்னொரு விஷயத்தைக் கூறி காமெடி செய்ததாக பா.ம.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 அதாவது, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 18 தொகுதிகளில் பா.ம.க. வெற்றி பெற்றது. வரும் தேர்தலில் 36 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அய்யா கூறியுள்ளார்.  கட்சியில் உள்ள இளைஞர்கள் ஒத்துழைத்தால், 36 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் என்று சின்ன அய்யாவும் கூறியுள்ளார்.

 இது பற்றி பா.ம.க.வினர் சிலரிடம்  கேட்டபோது,  எங்களால் 36 தொகுதிகளில் வெற்றி பெற முடியுமா, முடியாதா என்பதை பிறகு பார்க்கலாம்.  தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய எந்த அணியாக இருந்தாலும், பா.ம.க.வுக்கு 36 தொகுதிகளை ஒதுக்க யார் தயாராக இருக்கிறார்கள்?

முதலில், பா.ம.க.வுக்கு 36 தொகுதிகளை அய்யா வாங்கட்டும். அதுவே எங்களுக்கு பெரிய வெற்றிதான் என்று கமெண்ட் அடிக்கின்றனர்.  யாருடன் கூட்டணி என்பது பற்றி பா.ம.க. பொதுக்குழுவில் ஏதேனும் முடிவு செய்யப்பட்டதா என  பா.ம.க. வட்டாரங்களில் விசாரித்தபோது

 "அசிங்கமான காட்டேரியுடன் கூட்டு சேர்வதை விட, அழகான குட்டிச்  சாத்தானுடன் கூட்டு சேர்வது எவ்வளவோ மேல்' என்ற அடிப்படையிலேயே அவ்வப்போது கூட்டணிகளை மாற்றி வருவதாக அய்யா கூறினாராம்.

முழு கட்டுரையைப் படிக்க →