முதல்வர் ஜெயலலிதா

எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை

திருமலை சோமு

கவிதை எழுதியோ
கண்ணீர் வடித்தோ..
எம் சோகத்தை 
ஆற்றிக் கொள்ளமுடியாது..

உயிரைப் பிரிந்தவனுக்கு
உணர்வுகள் எப்படி இருக்கமுடியும்..

தமிழகத்தின் தங்கத் தாரகையே
சந்தனப்பேழைக்குள் உறங்கும் - உன் 
சரித்திரத்தை - நாளைய 
சந்ததிகள் வாசிக்கும்..

இன்று எங்களை தொற்றிக் 
கொண்ட சோகத்தை
எங்கு தொலைப்பது..

காற்று கூட நிரப்ப முடியாத
வெற்றிடமானது நீ வாழ்ந்த 
தமிழகம்..!

உன்னைப் போலவே இப்போது
சுவாசம் தேடி அலைகிறது.

மானுடச் சந்தையில்
விலைமதிக்க முடியாத 
உயிர் வாங்கிப் போன 
எமனை ஒன்று கேட்கிறேன்..

ஏனடா..
ஒற்றைக் கோப்பையில்
ஒட்டுமொத்தமாய்
ஒரு தேசத்தின்
உயிர் குடித்தாய்

-திருமலை சோமு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் கனமழை - புகைப்படங்கள்

எண்ணூர் விபத்து: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து: 9 பேர் பலி

தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோரை நலம் விசாரித்த செந்தில் பாலாஜி

முதல் போட்டியிலேயே வரலாறு படைத்த இந்திய மகளிரணி; இலங்கைக்கு 271 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT