தேவையானவை:
கேரட் - 1/4 கிலோ
வெல்லம் - 1/4 கிலோ
தேங்காய் - 2
நேந்திரம்பழம் - 1
செய்முறை: தேங்காயைத் துருவி மூன்றுமுறைப் பாலை தனித்தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கேரட்டைத் துருவி நன்றாக வேக வைத்து வெல்லத்தைப் போட வேண்டும். வெல்லம் வாசனைப் போன பிறகு இரண்டாவது, மூன்றாவது பாலைவிட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின் பழத்தை நறுக்கிப் போட வேண்டும். பின் முதன் முதலாக எடுத்த தேங்காய்ப் பாலை விட்டு ஒரு கொதி வந்தவுடன் கீழே இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.