சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழிபாதையில் செல்லும் மின்சார ரயில் பெட்டிகளில் பொதுப் பெட்டியில் தற்பொழுது பெண் பயணிகள் கூடுதலாக பயணம் செய்து வருகின்றனர். பெண்களுக்கான பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. அதனால் ஒவ்வொரு மின்சார ரயிலிலும் கூடுதலாக பெண்களுக்கு பெட்டிகள் இணைக்க தெற்கு ரயில்வே ஆவண செய்ய வேண்டும். மேலும் சென்னை அம்பத்தூர் ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடைக்கு செல்லும் வழியில் பாதை சீராக இல்லாமல் நடுவில் பள்ளமாக உள்ளது. இதனால் இரவில் செல்லும் பயணிகள் கால் இடறி விழுந்து காயம் ஏற்படுகிறது. இதை ரயில்வே நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.