மழைநீர் சேமிப்பு கால்வாயால் ஆபத்து
சென்னை பெருங்குடி பள்ளிக்கூட சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து வேம்புலி அம்மன் கோயில் வரை மழைநீர் சேமிப்பு கால்வாய் தோண்டப்பட்டுள்ளது.
சென்னை பெருங்குடி பள்ளிக்கூட சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து வேம்புலி அம்மன் கோயில் வரை மழைநீர் சேமிப்பு கால்வாய் தோண்டப்பட்டுள்ளது. பணிகள் முடிக்கப்படாமல் கால்வாயை திறந்து வைத்துள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள், முதியோர் கால்வாய் குழியில் விழும் அபாயம் உள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.