முகப்பு
இந்தியா

பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் சமுதாயத்தைக் கட்டமைப்போம்: குடியரசுத் தலைவர் மகளிர் நாள் வாழ்த்து!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!

Updated On : 8 மார்ச், 2026 at 9:43 AM
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து - @rashtrapatibhvn
பகிர்:

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘சர்வதேச மகளிர் நாளில் அனைவருக்கும் வாழ்த்துகள்! கல்வியறிவு பெற்ற மற்றும் முன்னேற்றமடைந்த பெண்களே முன்னேற்றத்தை நோக்கியதொரு நாட்டின் தூண்களாவர். பெண் சக்தி தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் துணிச்சலுடன் திறம்பட ஜொலிக்கிறது. இது, செழிப்பான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்துக்கான அடித்தளத்தை பலப்படுத்துவதாக அமைகிறது.

இத்தருணத்தில், ஒவ்வொரு பெண்ணும் சம வாய்ப்புகளுடன் வளர்ச்சி பெறவும் மாண்புடனும் பாதுகாப்புடனும் சுதந்திரமாகவும் வாழவும் ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்க நமது ஒருங்கிணைந்த கடமையை மீண்டும் உறுதியேற்றுக்கொள்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

summary

The President extends Womens Day 2026 greetings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.