கூடுதல் கவுன்ட்டர் திறக்கப்படுமா?
பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியிடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் செல்கின்றனர்.
பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியிடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் செல்கின்றனர். இதனால் இந்த ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் கவுன்ட்டரில் எப்போதும் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படுகிறது.
இதனால் பயணிகள் உரிய நேரத்தில் ரயிலை பிடிக்க முடிவதில்லை.
பயணிகள் அவதியை போக்க இங்கு கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்களைத் திறக்க ரயில்வே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement