பஸ் நிறுத்தத்தில் சுகாதாரக் கேடு..
சென்னை பிரேசன் பாலச்சாலையில் டிஎன்பிஎஸ்சி உள்பட முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. அம்பத்தூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் இந்த சாலையில் பஸ்கள் நிற்கும் இடத்தை மறைவிடமாக பயன்படுத்தி சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.
சென்னை பிரேசன் பாலச்சாலையில் டிஎன்பிஎஸ்சி உள்பட முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. அம்பத்தூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் இந்த சாலையில் பஸ்கள் நிற்கும் இடத்தை மறைவிடமாக பயன்படுத்தி சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.
இதனால் துர்நாற்றம் காரணமாக இந்த வழியாக செல்ல முடிவதில்லை. சுகாதார சீர்கேட்டை களைய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.