நாணயங்களுக்கு தட்டுப்பாடு
நாணயங்கள் தட்டுப்பட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பேருந்துகளில் பயணம் செய்யவும், உணவகங்களிலும்,மளிகைக் கடைகளிலும், மருந்துக் கடைகளிலும் 1,2,5 ரூபாய் நாணயங்கள் இல்லாமல் பொருள்கள் வாங்குவது சிரமமாக உள்ளது.
நாணயங்கள் தட்டுப்பட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பேருந்துகளில் பயணம் செய்யவும், உணவகங்களிலும்,மளிகைக் கடைகளிலும், மருந்துக் கடைகளிலும் 1,2,5 ரூபாய் நாணயங்கள் இல்லாமல் பொருள்கள் வாங்குவது சிரமமாக உள்ளது. நாம் வாழ்வதற்கு உணவு எப்படி தேவையோ அதுபோல தினசரி சின்ன, சின்ன செலவுகளுக்கு சில்லறை நாணயங்கள் அவசியமாகிறது. எனவே அதிக அளவில் சில்லறை நாணயங்களை புழக்கத்தில் விடவேண்டும். மேலும் அனைத்து வங்கிகளிலும் சில்லறை நாணயங்கள் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.