முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 77

மயில் விருத்தம், ஒன்பதாம் பாடலின் பொருளை இப்போது பார்ப்போம்.

Updated On : 11 டிசம்பர், 2015 at 2:25 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:11 PM

மயில் விருத்தம், ஒன்பதாம் பாடலின் பொருளை இப்போது பார்ப்போம்.

பதச் சேதம்

சொற் பொருள்

Advertisement

சிகர தமனிய மேருகிரி ரசதகிரி நீலகிரி எனவும்  தமனிய: பொன்மயமான; ரசத (rajata) வெள்ளிமயமான
ஆயிரமுகத் தெய்வநதி காளிந்தி என நீழல் இட்டு வெண்திங்கள்சங்கு எனவும்  ஆயிரமுகத் தெய்வநதி: கங்கை; காளிந்தி: யமுனை; நீழல், நிழல்: ஒளி என்றும் பொருள்
ப்ரபா நிகர் எனவும் எழுதரிய நேமி என உலகடைய நின்ற மாமுகில் என்னவே ப்ரபா: பிரபை, திருவாசி. எழுதரிய: ஓவியத்தில் தீட்ட அரிதான; நேமி: சக்கரம்
நெடிய முது ககன முகடு உற வீசி நிமிரும் ஒரு நீலக் கலாப மயிலாம் நீண்ட, தொன்மையான அண்டத்தின் உச்சி; கலாபம்: தோகை
அகரு மரு மணம் வீசு தணிகை அபிராம வேள் அடியவர்கள் மிடி அகலவே அகரு: அகில்; மரு: மருக்கொழுந்து; அபிராம: பேரழகன்; வேள்: உதவுபவன்; மிடி: வறுமை
அடல் வேல் கரத்து அசைய ஆறிரு புயங்களில் அலங்கல் குழாம் அசையவே அடல்: வலிய, அலங்கல்: மாலை; அசைய: விளங்க

மகர கன கோமளம் குண்டலம் பல அசைய வல் அவுணர் மனம் அசைய

 

மகரமீன் வடிவில் செய்யப்பட்ட கனமான குண்டலங்கள்; கோமளம்: அழகிய; அவுணர்: அரக்கர். முதல் அசைய: விளங்க; அடுத்த அசைய: நடுங்க
மால் வரை அசைய உரகபிலம் அசைய எண் திசை அசைய வையாளி ஏறு மயிலே. மால்: பெரிய, உரகபிலம்: நாகலோகம்; வையாளி: குதிரையை ஒத்த ஒய்யார நடை.

</p><p align="JUSTIFY"><br /><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/235382597&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p align="JUSTIFY"><strong>தமனிய சிகர</strong> <strong>மேருகிரி</strong>... பொன்மயமான சிகரங்களைக் கொண்டமேரு மலையைப் போலவும்,</p><p align="JUSTIFY"><strong>ரசதகிரி</strong> ... ரஜதம்—வெள்ளி; வெள்ளியங்கிரி எனப்படும் கைலாச மலையைப் போலவும்,</p><p align="JUSTIFY"><strong>நீலகிரி</strong> ... நீலோத்பலங்கள் பூத்திருக்கும் தணிகை மலையைப் போலவும்</p><p align="JUSTIFY"><em>(</em>பற்பல நிறங்களைக் கொண்ட தன் தோகையை விரித்து பிரமாண்டமாக நிற்கிறது<em>. </em>ஆனால் மலைகள் உயர்ந்து கம்பீரமாக நிற்கின்றன<em>; </em>மயிலோ நதிகளைப் போல அருளின் தண்மையையும் கொண்டுள்ளது<em>. </em>ஆகவே தோகையை விரித்து நிற்கும் மயிலுக்கு நதிகளை உவமை சொன்னார்<em>.)</em></p><p align="JUSTIFY"><strong>ஆயிரமுக</strong>... பல ஆயிரம் கிளைகளாகப் பிரிந்தோடுகின்ற,</p><p align="JUSTIFY"><strong>தெய்வ நதி... </strong>கங்கையைப் போலவும்<strong /></p><p align="JUSTIFY"><strong>காளிந்தி என</strong> ... யமுனையைப் போலவும்,</p><p align="JUSTIFY">(மயில், தோகையை விரித்திருக்கிறது; நதிகள் கிளைநதிகளை விரித்திருக்கின்றன)</p><p align="JUSTIFY"><strong>நீழல் இட்டு</strong> ... ஒளி வீசுகின்ற (நிழல் என்றால் ஒளி என்றும் பொருளுண்டு. அதனால்தான் ஒளிப்படமான photograph, நிழற்படம் எனப்படுகிறது)</p><p align="JUSTIFY"><strong>வெண்திங்கள் சங்கு எனவும்</strong> ... வெண்ணிலாவை ஒத்திருக்கும் சங்கைப் போலவும்,</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY">ப்ரபா நிகர் எனவும் — திருவாசியைப் போல<em>. </em>மயில் தோகையை விரித்திருப்பது<em>, </em>இதோ மேலே நடராசப்பெருமானைச் சுற்றியுள்ள திருவாசியைப் போல வட்டமாக இருக்கிறது<em>. (</em>படம்<em>: </em>நன்றி விக்கிபீடியா<em>)</em></p><p align="JUSTIFY"><strong>எழுதரிய நேமி என</strong> ... ஓவியமாக தீட்டுவதற்கு அரிய வட்டவடிவமான சக்கரத்தைப் போலவும் எழுதுவதற்கு அரிதான வட்ட வடிவமான சக்ரம் போலவும்,</p><p align="JUSTIFY"> <strong>உலகடைய நின்ற மாமுகில் என்னவே</strong> ... உலகத்தை அடைத்துக்கொண்டு பரவியிருக்கின்ற பெரிய மேகக்கூட்டத்தைப் போலவும்,</p><p align="JUSTIFY"> <strong>நெடிய முது ககன முகடு</strong> ... நீண்ட பழமையான அண்டத்தின் உச்சி வரையிலும்,</p><p align="JUSTIFY"><strong>வீசி நிமிரும்</strong> ... தன் தோகையை நிமிர்த்தி வீசியிருக்கும்,</p><p align="JUSTIFY"><strong>ஒரு</strong> ... ஒப்பற்ற,</p><p align="JUSTIFY"><strong>நீலக் கலாப மயிலாம்</strong> ... நீல நிறத் தோகையைக் கொண்ட மயில்</p><p align="JUSTIFY"><em>(</em>இத்தகைய மயில் யாருடையது என்று கேட்டால்<em>)</em></p><p align="JUSTIFY"><strong>அகரு மரு மணம் வீசு</strong> ... அகிலும் மருக்கொழுந்தும் மணம் கமழ்கின்ற,</p><p align="JUSTIFY"><strong>தணிகை அபிராம வேள்</strong> ... திருத்தணிகையில் வீற்றிருக்கும் பேரழகன், (ரமிக்கத் தகுந்தவன் ராமன், இவன் அபிராமன்—அதற்குமேலும் பேரழகன்)</p><p align="JUSTIFY"><strong>அடியவர்கள் மிடி அகலவே</strong> ... தன்னுடைய அடியவர்களை அடைந்திருக்கும் வறுமை அவர்களை விட்டு நீங்குமாறு,</p><p align="JUSTIFY"><strong>அடல் வேல் கரத்தசைய</strong> ... திருக்கரத்தில் வலிமை நிறைந்த வேலாயுதம் விளங்கவும்,</p><p align="JUSTIFY"><strong>ஆறிரு புயங்களில் அலங்கற் குழாம் அசையவே</strong> ... பன்னிரண்டு திருப்புயங்களில் மாலைக் கூட்டங்கள் அசைந்து விளங்கவும்,</p><p align="JUSTIFY"><strong>மகர கன</strong> <strong>கோமள குண்டலம் பல அசைய</strong> மீன்வடிவத்தில் செய்யப்பட்டதும், கனமான பொன்னாலானதுமான குண்டலங்கள் காதுகளில் அசையவும்<em>,</em></p><p align="JUSTIFY"><strong>வல் அவுணர் மனம் அசைய</strong> ... கொடிய அரக்கர்களின் மனம் கலங்கவும்,</p><p align="JUSTIFY"><strong>மால் வரை அசைய</strong> ... பெரிய மலையான கிரவுஞ்சம் நடுங்கவும்,</p><p align="JUSTIFY"><strong>உரகபிலம் அசைய</strong> ... பாதாள லோகம் கிடுகிடுக்கவும், (உரகம்: நாகம்; பிலம்: நீண்ட குகை, புற்று, பாதாளம்)</p><p align="JUSTIFY"><strong>எண் திசை அசைய</strong> ... எட்டுத் திக்குகளும் நடுக்கமுறவும்,</p><p align="JUSTIFY"><strong>வையாளி ஏறும் மயிலே</strong> ... திருமுருகனுடைய பவனிக்காக ஒய்யாரமாகப் புறப்படும் மயிலேதான் அது.</p><p align="JUSTIFY">பல சிகரங்களையுடைய மேரு<em>, </em>வெள்ளியங்கிரி போன்ற மலைகளைப் போலவும்<em>, </em>பல்லாயிரக்கணக்கான கிளைகளாகப் பிரிந்தோடும் கங்கை<em>, </em>யமுனையாறுகளைப் போலவும்<em>, </em>வெண்மையான நிலவை ஒத்த சங்கைப் போலவும்<em>, </em>தெய்வத் திருவுருவங்களைச் சுற்றி விளங்கும் திருவாசியைப் போலவும்<em>, </em>வட்ட வடிவமாக சக்கரத்தைப் போலவும்<em>, </em>உலகம் முழுவதையும் அடைத்துக் கொண்டு பரவியிருக்கும் மேகங்களைப் போலவும் சிறகை உயரமாகவும் பரவலாகவும் விரித்திருக்கிற மயில்<em>. </em>இப்படிப்பட்ட மயில் யாருடையது என்றால்<em>,</em></p><p align="JUSTIFY">அகிலும் மருக்கொழுந்தும் மணம் வீசுகின்ற தணிகையில் எழுந்தருளியிருக்கும் பேரழகனும்<em>; </em>அடியவர்களுடைய வறுமை அவர்களை விட்டு நீங்குமாறு திருக்கரங்களில் வேலும்<em>, </em>திருத்தோள்களில் மாலைகளும் விளங்க<em>, </em>திருச்செவிகளில் குண்டலங்கள் அசைய<em>, </em>அரக்கர்கள் மனம் கலங்க<em>, </em>பெரிய மலைகள் நடுக்கம் கொள்ள<em>, </em>நாகலோகம் பதற<em>, </em>எட்டுத் திசைகளும் கலங்க<em>, </em>திருமுருகன் பவனிவருவதற்காக ஒய்யார நடை நடைக்கும் மயில்தான் அது<em>.</em></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.