முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 79

தொன்மையான மூர்த்தியும், முரன் என்ற அசுரனைக் கொன்றவனுமான திருமாலின் மருகமகனும்;

Updated On : 11 டிசம்பர், 2015 at 2:25 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:11 PM

பதச் சேதம்

சொற் பொருள்

நிராசத விராசத வரோதய பராபரன் நிராகுலன் நிராமய பிரான்
 

Advertisement

நிராஜத: ரஜோ குணம் இல்லாத; விராசத: ரஜோகுணத்தைக் கடந்த, எதிரான, சத்வகுணமுள்ள; வரோதய: வரங்களுக்கு உறைவிடமான; நிர் ஆகுலன்: வருத்தங்களைப் போக்குபவன்; நிர் ஆமய: (ஆமயம்=நோய்) நோயற்ற, நோய்களைக் களையும்; பிரான்: தலைவன்

நிலாது எழுதலால் அறமிலான் நெறியிலான் நெறி நிலாவிய உலாச இதயன்
 

(அன்வயம்) அறமிலான் நெறியிலா;ன நிலாது எழுதலால்.  அறமற்றவரும், நெறியற்றவரும் தம்மைச் சாராமல், அவர்பால் நில்லாமல் எழுகின்ற காரணத்தால், நன்னெறியில் நிலாவுபவன், மகிழ்ச்சி பொங்கும் இதயங்கொண்டவன்.

குராமலி விராவு உமிழ் பராரை அமரா நிழல்

குராமலி: குரா மரத்தில் நிறைந்து; விராவு: கலந்து; உமிழ்: வெளிப்பட்டு; பராரை: பருத்த அடிப்பாகத்தில், அமரா நிழல்: நிழலில் அமர்ந்து;

(முருகன் திருவிடைக்கழியில் குராமர நிழலில் எழுந்தருளியிருப்பதால் இது திருவிடைக்கழி முருகனைக் குறிக்கிறது)

குராநிழல் பராவு
தணிகைக் குலாசலம் சராசரம் எலாம் இனிது உலாவிய குலாவிய கலாப மயிலாம்
 

குராநிழல் பராவு: குரா மரத்தின் ஒளி மிகுந்துள்ள; தணிகை: திருத்தணிகை; குலாசலம்: குல அசலம், குலகிரி. சராசரம்: எல்லா இடங்களிலும்; கலாபம்: தோகை

புராரி குமரா குருபரா எனும் வரோதய புராதன முராரி மருகன்
 

புராரி: புரத்தை அழித்த சிவன்; வரோதய: வர உதய, வரங்களுக்கு இருப்பிடமான, புராதன: தொன்மையான, முராரி: முரன் என்னும் அரக்கனை அழித்த திருமால்

புலோமசை சலாமிடு பலாசன வலாரி புகலாகும் அயி லாயுதன்
 

புலோமசை: இந்திராணி; சலாமிடு: வணங்கும்; பலாசன: (பல அசனம்: பழங்களை உண்டு வாழும் கிளி(போன்ற); வலாரி: வலன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரன்; அயில்: கூர்மை, கூர்மையாயிருப்பதால் வேலுக்கு ஆகுபெயர்.

நெடும் தராதல கிராதர்கள் குல ஆதவ அபிராம வலசாதனன் விநோத சமரன்
 

நெடும்: நெடிய; தராதலம்: பூமி; கிராதர்: வேடர்; ஆதவன்: சூரியன்; அபிராம: பேரழகன்; வ(ல்)ல சாதனன்: வலிமையைச் சாதிப்பவன்; விநோத சமரன்: விளையாட்டாகப் போர்புரிபவன்

தடாரி விகடாசுரன் குடாரி இதபடா திகழ்  ஷடாநநன் நடாவு மயிலே.
 

தடாரி: கிரவுஞ்ச மலைக்குப் பகைவன்; விகடாசுரன்: தொந்தரவு கொடுத்த அசுரனான, மாமரமாக நின்ற சூரனுக்கு; குடாரி: கோடரி; இதபடா: இதம்பட்டு; ஷட ஆநந: ஆறுமுகன்; நடாவு: செலுத்துகின்ற.

</p><p align="justify"> </p><p align="justify"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/235548292&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p align="justify"><br /><strong>நிராசத</strong> ... நி ராஜத: (தமோ, சத்வ) ரஜோ (குணங்களில்) ரஜோ குணம் அற்றவன்;</p><p align="justify"> </p><p align="justify"><strong>விராசத</strong> ... 'வி' + 'ராஜத', ரஜோ குணத்துக்கு மாறான சத்வகுணம் உள்ளவன்.</p><p align="justify"><br /><strong>வரோதய</strong> ... (அடியாருக்கு) வரங்களுக்கு இருப்பிடமாக விளங்குபவன்,<br /><br /><strong>பராபர</strong> ... பரம்: மேலானது, பராபரம்: மேலான பரம்பொருளானவன்,<br /><br /><strong>நிராகுலன்</strong> ... நிர் ஆகுலன்: ஆகுலங்கள் (வருத்தங்களைப்) போக்குபவன்,<br /><br /><strong>நிராமயன்</strong> ... நிர் அமயன்: நோய்களை அழிப்பவன்;<br /><br /><strong>பிரான்</strong> ... தலைவன்,<br /><br /><strong>அறமிலான் நெறியிலான் நில்லாது எழுதலால்</strong> ... அறநெறியிலும், ஒழுக்க நெறியிலும் நிற்காதவர்கள் தன்னிடத்தில் நில்லாமல் எழுபவன்,</p><p align="justify"><br /><strong>நெறி நிலாவிய உலாச இதயன்</strong> ... நல்ல நெறியில் நிற்பவர்களே தன்பால் நிற்கச் செய்பவன்; உல்லாச மனநிலையில் விளங்குபவன்,<br /><br /><strong>குராமலி</strong> ... குரா மரங்களில் நிறைந்து,<br /><br /><strong>விராவு உமிழ்</strong> ... கலந்து வெளிப்பட்டு விளங்கும்,<br /><br /><strong>பராரை</strong> ... பருத்த அடிமரத்தின் கீழ்,<br /><br /><strong>அமரா</strong> ... (திருவிடைக்கழியில்) வீற்றிருப்பவன்,<br /><br /><strong>நிழல்</strong> ... ஒளி வீசும்,<br /><br /><strong>குரா நிழல்</strong> ... குரா மரங்களின் நிழலில்,<br /><br /><strong>பராவு</strong> ... படர்ந்திருக்கும்,<br /><br /><strong>தணிகை குலாசல</strong> ... திருத்தணிகை முதலிய குலபர்வதங்களாக (விளங்குகிற) சிறந்த மலைத்தலங்களில்,<br /><br /><strong>சராசரம்</strong> ... உலகம் முழுவதிலும்,<br /><br /><strong>இனிது உலாவிய</strong> ... இனிதே திரிந்தும்,<br /><br /><strong>குலாவிய கலாப மயிலாம்</strong> ... குலவுவதுமான தோகை மயில் இது.</p><p align="justify"> </p><p align="justify"><strong>புராரி குமரா</strong> ... திரிபுரங்களை அழித்த சிவபெருமானுடைய மகனே</p><p align="justify"><br /><strong>குருபரா</strong> ... குருமூர்த்தியே,<br /><br /><strong>எனும்</strong> ... என்று துதிக்கின்ற,<br /><br /><strong>வரோதய</strong> ... அடியார்களுக்கு, வரங்களின் இருப்பிடமாய் விளங்குபவன்,<br /><br /><strong>புராதன முராரி மருகன்</strong> ... தொன்மையான மூர்த்தியும், முரன் என்ற அசுரனைக் கொன்றவனுமான திருமாலின் மருகமகனும்;<br /><br /><strong>பலாசன புலோமசை</strong> ... (பழங்களை உண்டு வாழ்கின்ற) கிளியைப் போன்ற இந்திராணி, <br /><br /><strong>சலாமிடு</strong> ... தொழுது வணங்குபவன்;<br /><br /><strong>வலாரி புகலாகும் அயிலாயுதன்</strong> ... வலன் என்ற அரக்கனைக் கொன்றவனான இந்திரனுக்குப் புகலிடமாக, சரணாகதியாக விளங்கும் வேலாயுதன்,<br /><br /><strong>நெடும் தரா தல</strong> ... நெடிய பூமியிலுள்ள,<br /><br /><strong>கிராதர்கள் குல ஆதவ</strong> ... வேடர்களின் குலத்துக்கு ஆதவனாக—சூரியனாக--விளங்கி,<br /><br /><strong>அபிராம</strong> ... (வேடர்குல மாப்பிள்ளையாக விளங்கும்) பேரழகன்,<br /><br /><strong>வல சாதனன்</strong> ... வலிமையை சாதித்தவன்,<br /><br /><strong>விநோத சமரன்</strong> ... போர் புரிவதை விளையாட்டாகச் செய்பவன்,<br /><br /><strong>தடாரி</strong> ... மலைத் தடமான கிரவுஞ்சத்தை அழித்தவன்,<br /><br /><strong>விகடாசுரன்</strong> ... தொந்தரவுசெய்து வந்த சூரபத்மன் (மாமர வடிவம் எடுத்தபோது அவனை),<br /><br /><strong>குடாரி</strong> ... கோடாரியைப் போல் மார்பை இரு கூறாகப் பிளந்தவன்,</p><p align="justify"> </p><p align="justify">(ப<em>4</em>வானீ பா<em>4</em>வனாக<em>3</em>ம்யா ப<em>4</em>வாரண்ய<em>-</em>குடா<em>2</em>ரிகா <em>|</em></p><p align="justify"><em>என்பது லலிதா ஸஹஸ்ரநாமம்.  பிறப்பாகிய காட்டுக்குக் கோடரியானவள்.  குடாரி: கோடரி</em>)<br /><br /><strong>இதபடா திகழ் ஷடாநநன்</strong> ... இதப்பட்டு (மகிழ்ச்சியுற்றுத்) திகழும் ஆறுமுகன்,<br /><br /><strong>நடாவு மயிலே</strong> ... செலுத்துகின்ற மயிலே தான் அது.<br /> </p><p align="justify">இராசத குணமற்றவன்; அதற்கு மாறான சத்வ குணமுள்ளவன்; வரங்களுக்கு இருப்பிடமானவன்; மேலான பரம்பொருள்; கவலையை அழிப்பவன்; நோய்களைப் போக்குபவன்; தலைவன்; அறமற்றவர்களும் நெறியற்றவர்களும் சாராதவன்; நன்னெறியில் நிற்போர் சார்ந்த உல்லாசமான மனோநிலையில் விளங்குபவன்; பருத்த அடிமரத்தைக் கொண்ட குராமரத்தின்கீழ்—திருவிடைக்கழியில்—வீற்றிருப்பவன்; ஒளிமிக்க குராமரங்களின் நிழல் படிந்துள்ள திருத்தணிகை முதலான தலங்களில் எழுந்தருளியிருப்பவன் எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து மகிழ்வதான மயில்வாகனம்—இந்த வாகனம் யாருடையதோ என்றால்,</p><p align="justify">திரிபுரத்தை எரித்த சிவனுடைய குமாரனே, குருமூர்த்தியே என்று துதிக்கும் அடியார்களுக்கு வரங்களின் இருப்பிடமாக விளங்குபவனும்; தொன்மையானவனும், முரன் என்ற அரக்கனை அழித்தவனுமான திருமாலின் மருகனும்; கிளிபோன்றவளான இந்திராணி துதித்துப் போற்றுபவனும்; இந்திரனுக்குப் புகலிடமானவனும்; வேலை ஆயுதமாக உடையவனும்; நீண்ட பூமியில் வாழ்கின்ற வேடர்களின் குலத்துக்கு மாப்பிள்ளையாக வந்த சூரியனும்; பேரழகனும்; வலிமையைச் சாதிப்பவனும்; விளையாட்டாகப் போர்புரிபவனும்; கிரவுஞ்ச மலையை அழித்தவனும்; தொல்லை கொடுத்த சூரனாகிய மாமரத்துக்குக் கோடரியாக நின்று வெட்டிச் சாய்த்தவனும்; மகிழ்ச்சியுற்றுத் திகழ்பவனுமான ஆறுமுகன் செலுத்துகின்ற மயில்தான் அது.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.