முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 88

ஆகாயத்தை முட்டும்படியாக நெடிய உருவத்தைக் கொண்ட யமன் எனக்கெதிரே வருகின்ற (என்னுடைய இறுதிக் காலத்திலே) உன்னுடைய தோகைமயிலாகிய குதிரையில் அமர்ந்தபடி என்முன்னே காட்சியளிக்க வேண்டும்

Updated On : 14 டிசம்பர், 2015 at 5:43 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:17 PM

மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றுவன்வந் தாலென்முன்னே
தோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே.

ஆகாயத்தை முட்டும்படியாக நெடிய உருவத்தைக் கொண்ட யமன் எனக்கெதிரே வருகின்ற (என்னுடைய இறுதிக் காலத்திலே) உன்னுடைய தோகைமயிலாகிய குதிரையில் அமர்ந்தபடி என்முன்னே காட்சியளிக்க வேண்டும் என்றார் கந்தர் அலங்காரத்திலே.  இந்த அடிகளின் பின்னே தூய்மையானதும் அழியாததுமான முக்தியை அருளும் தியாக மலையான தியாகராஜப் பெருமானைத் தன் வலதுபாகத்தில் வைத்த பரமமங்களம் கொண்ட உமையம்மையின் மகனே என்று அம்மையைப் புகழ்கிறார்.

இறுதி மூச்சு பிரியும் நேரத்திலே கண்முன்னாலே வேலும் மயிலும் இரண்டு பிராட்டியருமாய் குமரன் காட்சியளிக்கின்ற அந்தத் திருக்கோலத்தை நினைக்கும்போதெல்லாம் மயிர்சிலிர்க்கிறது.  சேவல் விருத்தத்தின் மூன்றாம் பாடலிலும் இந்தக் காட்சியைக் காட்டுகிறார்.  யமன் முன்னே வந்து நிற்கின்ற சமயத்தில் வேலும் மயிலுமாய் இறைவன் தோன்றுகிறான்.  இறைவனுடைய வரவை அறிவித்தபடி பெருங்குரலால் கூவிக்கொண்டு சேவல் முன்னே வருகிறது.  அடுத்ததாக, பாண்டியனுக்கு வந்த வெப்பு நோயைப் போக்கி அமணரைக் கழுவேற்றியவரும், சீர்காழியில் உதித்தவருமான முருகனுடைய கொடியில் விளங்கும் சேவல் என்று முடிக்கிறார்.  திருஞானசம்பந்தர் முருகப்பெருமானுடைய திருவவதாரமே என்று பல பாடல்களில் சொல்வதைப் போலவே இந்தப் பாடலிலும் குருநாதர் சொல்கிறார்.  இன்று பாட்டைப் பார்ப்போம்; பதிவைக் கேட்போம்.  நாளை பொருளைப் பார்ப்போம்.

Advertisement

கரிமுரட் டடிவலைக் கயிறெடுத் தெயிறுபற்
   களையிறுக் கியு முறைத்துக்


கலகமிட் டியமன்முற் கரமுறத் துடருமக்
   காலத்தில் வேலு மயிலும்


குருபரக் குகனுமப் பொழுதில்நட் புடன்வரக்
   குரலொலித் தடிய ரிடரைக்


குலைத்தலறு மூக்கிற் சினப்பேய்க ளைக்கொத்தி
   வட்டத்தில் முட்ட வருமாம்


அரியகொற் கையனுடற் கருகும்வெப் பகையையுற்

   பனமுறைத் ததமி கவுமே


வமணரைக் கழுவில்வைத் தவருமெய்ப் பொடிதரித்
   தவனிமெய்த் திட அருளதார்


சிரபுரத் தவதரித் தவமுதத் தினமணிச்
   சிவிகைபெற் றினிய தமிழைச்


சிவனயப் புறவிரித் துரைசெய்விற் பனனிகற்
   சேவற் றிருத்து வசமே.

</p><p align="JUSTIFY"> </p><p><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/237058415&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.