முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 50

திருமுருகன் வழிபாட்டை விநாயகர், தேவி, சிவன் என்று எல்லோருடனும் சேர்த்துச் செய்பவரான குருநாதர் இந்தப் பாடலில் முருகனுடைய மாமனான திருமாலைத் துதிக்கிறார்

Updated On : 29 அக்டோபர், 2015 at 4:58 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:57 PM

வேல் விருத்தம் ஏழாம் பாடல்

திருமுருகன் வழிபாட்டை விநாயகர், தேவி, சிவன் என்று எல்லோருடனும் சேர்த்துச் செய்பவரான குருநாதர் இந்தப் பாடலில் முருகனுடைய மாமனான திருமாலைத் துதிக்கிறார்.நான்கடிப் பாடலில் இரண்டடிகள் திருமால்தான்.

அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி

Advertisement

 அநந்தமா யினுமேவினால்


அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல்

 அறியாது சூரனுடலைக்


கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங்

 கடியகொலை புரியு மதுசெங்


கநகா சலத்தைக் கடைந்துமுனை யிட்டுக்

 கடுக்கின்ற துங்க நெடுவேல்


தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட

 தானவாந் தகன்மாயவன்


தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத்

 தமனியச் சுடிகையின் மேல்


வண்டொன்று கமலத்து மங்கையுங் கடலாடை

 மங்கையும் பதம்வருடவே


மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன்

 வாகைத் திருக்கை வேலே.

மூன்றாமடியில் திருமாலின் பஞ்சாயுதங்கள் பேசப்படுகின்றன. அடுத்ததாக ஆதிசேடன், அடுத்ததில் சீதேவி, பூதேவி… இப்படி திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள திருமாலின் மருகனாகிய குகனுடைய கைவேலைப் பாடல் பேசுகிறது. நாளைக்கு விரிவாகக் காண்போம்.

</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/230612867&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.