முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 61

மூல முதல்வனான சிவனை வலம் வரும் அளவில்: (மாங்கனிக்காக போட்டியிட்ட சமயத்தில் சிவனை வலம்வரும் அதே அளவு நேரத்திலேயே)

Updated On : 13 நவம்பர், 2015 at 2:43 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:03 PM

பதச் சேதம்

சொற் பொருள்

சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச் சரண யுகள அமிர்த ப்ரபாசந்தான: தேவலோக மரங்கள் ஐந்தில் ஒன்று, பரிமள: நறுமண, கிண்கிணீ முக: சதங்கையை அணிந்த, சரண: பாத, யுகள(ம்): இரண்டு, ப்ரபா: ஒளி
சந்த்ர சேகர மூஷிகா ஆருட வெகு மோக சத்ய ப்ரிய ஆலிங்கனசந்த்ர சேகர: பிறையை அணிந்த, மூஷிக: பெருச்சாளி, ஆரூட: ஏறிய, வெகுமோக: மிக்க ஆவலுடன், சத்ய: வாய்மையை, ப்ரிய: நேசத்துடன், ஆலிங்கன: தழுவுபவனும்
சிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரியம்பக விநாயகன்சிந்தாமணி: நினைத்ததைத் தரும் மணி, கலச கர: கலசத்தைக் கையில் உடைய, கட: மதம் கபோலம்: கன்னம், த்ரியம்பக: முக்கண்
முதல் சிவனை வலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு சித்ர கலாப மயிலாம்முதல்வனால சிவனை வலம்வரும் அளவில். அண்டங்களையெல்லாம் சுற்றி வந்த, சித்ர: அழகிய, கலாப(ம்): தோகை, தோகையை உடைய
மந்தாகிநி பிரபவ தரங்க விதரங்க வனசரோதய கிர்த்திகா வரபுத்ரமந்தாகினி: கங்கை, பிரபவ: சிறப்புடன் தோன்றிய (பவ: தோன்றுகிற, பிரபவ: சிறந்து தோன்றுகிற—சாதம், பிரசாதம் என்பதுபோல பவ, பிரபவ) தரங்க: கவலை (அலை என்பது பொதுப் பொருள். அலையாய் எழும் கவலை என்று இங்கே பொருள்) விதரங்க: பிளந்து எறியும், வனசரோதய: வனசர உதய: வனசரன் (வேடன்) உதய: தோன்றிய, கிர்த்திகா வரபுத்ர: கார்த்திகைப் பெண்களிடம் சிறந்த புதல்வனாக (வளர்ந்த)
ராஜீவ பரியங்க தந்தி அ வர அசலன்ராஜீவ(ம்): தாமரை, பரியங்கம்: கட்டில், தந்தி: பாம்பு, அ: அந்த, வர: சிறந்த, அசலன்: மலையினன் (நாகமலை என்றும் அறியப்படும் திருச்செங்கோடு—சர்ப்பகோத்ரம் என்றும் பெயர்)
குலிசாயுதத்து இந்த்ராணி மங்கில்ய தந்து ரட்சாபரண இகல் வேல் விநோதன் அருள்கூர்
இமையகிரி குமரி மகன் ஏறு நீலக்ரீவ ரத்னக் கலாப மயிலே.
குலிசம்: வஜ்ராயுதம், இந்த்ராணி: சசி எனப்படும் இந்திராணி, மங்கில்ய: மாங்கல்யம், தாலி, தந்து: (Tantu) சரடு, ரட்சாபரண: காத்துத் தாங்கி, இகல்: போர், விநோதன்: அழகன், க்ரீவம்: கழுத்து, நீலக்ரீவ: நீலக் கழுத்து, ரத்ன: மரகத, பச்சைமகணி, கலாபம்: தோகை

</p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/232870477&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p align="JUSTIFY"><br /><strong>சந்தான புஷ்ப</strong> ... (தேவலோகத்தின் ஐந்து தருக்களில் ஒன்றான) சந்தான மரத்தினுடைய மலரின்</p><p align="JUSTIFY">(ஐந்து தேவதாருக்கள்: கற்பகம், அரிசந்தனம், சந்தானம், பாரிஜாதம், மந்தாரம். மனத்தில் நினைத்ததைத் தருபவை)</p><p align="JUSTIFY"><strong>பரிமள</strong> ... வாசம் கமழ்வதும்</p><p align="JUSTIFY">(தேவர்கள் சந்தான மலராலே பாதங்களில் அர்ச்சிப்பதால் அந்த மணம் கமழ்கிறது)<br /><br /><strong>கிண்கிணீ முக</strong> ... சதங்கையை அணிந்ததும்</p><p align="JUSTIFY"><strong>அமிர்த ப்ரபா</strong> ... அமிர்த ஒளியை வீசுவதுமான,</p><p align="JUSTIFY"><strong>சரண யுகள</strong> ... இரண்டு திரு அடிகளை உடையவரும்<br />(யுகள - இரண்டு),</p><p align="JUSTIFY"><strong>சந்திர சேகர</strong> ... பிறைச் சந்திரனை அணிந்தவரும்,</p><p align="JUSTIFY"><strong>மூஷிக ஆரூட</strong> ... மூஷிக வாகனரும்,</p><p align="JUSTIFY"><strong>வெகு மோக சத்ய பிரிய ஆலிங்கன</strong> ... மிகுந்த நேசத்துடம் சத்தியத்தைத் (வாய்மை நெறியைத்) தழுவிக்கொண்டிருப்பவரும்,<br /><br /><strong>சிந்தாமணி</strong> ... (அமரலோகத்து மணியான) சிந்தாமணி(யைப் போல நினைத்ததைத் தருபவரும்) (சிந்தித்ததைத் தரும் மணி சிந்தாமணி),</p><p align="JUSTIFY"><strong>கலச கர</strong> ... (தாய் தந்தையர்களுக்கு அபிஷேகம் செய்வதற்காக) ரத்ன கலசத்தை திருக் கரத்தில் ஏந்தி இருப்பவரும், (விநாயகரின் துதிக்கை நுனியில் ஒரு கலசம் இருப்பதைக் காணலாம்)</p><p align="JUSTIFY"><strong>கட கபோல</strong> ... மத நீர் பெருகுகின்ற கன்னங்களை உடையவரும்,</p><p align="JUSTIFY"><strong>த்ரியம்பக விநாயகன்</strong> ... முக் கண்ணை உடையவருமாகிய விநாயகர்,</p><p align="JUSTIFY"><strong>முதல் சிவனை வரும் அளவில்</strong> ... மூல முதல்வனான சிவனை வலம் வரும் அளவில்: (மாங்கனிக்காக போட்டியிட்ட சமயத்தில் சிவனை வலம்வரும் அதே அளவு நேரத்திலேயே),</p><p align="JUSTIFY"><strong>உலகடைய நொடியில் வரு</strong> ... அண்டங்கள் அனைத்தையும் ஒரு இமைப்போதில் வலம் வந்ததான,</p><p align="JUSTIFY"><strong>சித்ர கலாப மயிலாம்</strong> ... அழகிய தோகையைக் கொண்ட மயில்,</p><p align="JUSTIFY">(இந்த மயில் யாருடையது என்று கேட்டால்,)</p><p align="JUSTIFY"><strong>மந்தாகினி பிரபவ</strong> ... கங்கையிலே சிறப்புடன் தோன்றியவரும் (பவ, பிரபவ விளக்கங்களை மேலே பார்க்கவும்),</p><p align="JUSTIFY"><strong>தரங்க விதரங்க</strong> ... (அலையலையாய்த் தொடர்ந்துவரும்) மனக் கவலைகளை பிளந்து எறிபவரும்,</p><p align="JUSTIFY"><strong>வன சரோதய</strong> ... (வன+சர+உதய: வனசரன்: வேடன்) (காட்டிலே, வள்ளிக்காக) வேடன் வடிவத்தில் தோன்றியவனும் (உதித்தவனும்),</p><p align="JUSTIFY"><strong>கிர்த்திகா வர புத்ர</strong> ... கார்த்திகைப் பெண்களின் சிறந்த புதல்வனும் (வர என்பதற்குச் சிறந்த என்று பொருள். வரானன என்பதற்கு அழகிய—சிறந்த—முகம் என்று பொருள்படுவது போல்),</p><p align="JUSTIFY"><strong>ராஜீவ பரியங்க</strong> ... தாமரைப் பூவைத் தன் கட்டிலாக (படுக்கையாகக்) கொண்டவனும்,<br /><br /><strong>தந்தி அ வர அசலன்</strong> ... நாகத்தின் வடிவமான அந்தச் சிறந்த மலையில் உறைபவனும், (நாகமலை, சர்ப்பகோத்ரம், எல்லாமே திருச்செங்கோட்டைக் குறிப்பவை)</p><p align="JUSTIFY"><strong>குலிசாயுதத்து இந்திராணி</strong> ... வஜ்ராயுதத்தை ஏந்தியவனான இந்திரன் மனைவியாகிய இந்திராணியின்,</p><p align="JUSTIFY"><strong>மாங்கல்ய தந்து ரட்சாபரண</strong> ... மாங்கல்ய நூலை ரட்சித்துத் தாங்கியவனும், (கந்தனுடைய வெளிப்பாடே சூரசம்ஹாரம் என்பதனால், இந்திராணியின் மாங்கல்யத்தைக் காப்பதே முதல் காரணம். <em>சசிதேவி மாங்கல்ய தந்து ரட்சாபரண க்ருபாகர ஞானாகர, சுர பாஸ்கரனே--கந்தரலங்காரம்</em>)<br /><br /><strong>இகல் வேல் விநோதன்</strong> ... போரில் எழுகின்ற வேலை ஏந்திய பேரழகனும்,<br /><br /><strong>அருள் கூர்</strong> ... அருளைச் சுரக்கும்,</p><p align="JUSTIFY"><strong>இமயகிரி குமரி மகன்</strong> ... ஹிமவான் மகளான உமாதேவியின் திருக்குமாரன், <br /><br /><strong>ஏறு நீலக்ரீவ ரத்ன கலாப மயிலே</strong> ... (வாகனமாக) எறிவருவதும், நீலநிறக் கழுத்தையுடையதும் பச்சை மணியைப்போல ஒளிவீசும் தோகையையும் உடைய மயில்தான் அது.</p><p align="JUSTIFY">விநாயகர் ஏறிவரும் மூஷிகம், அவருடன் போரிட்ட கஜமுகன் எடுத்த வடிவம். அந்த மூஷிகத்தையே தன் வாகனமாக்கிக்கொண்டார் விநாயகர்.</p><p align="JUSTIFY">முருகன் ஏறிவரும் மயில், விநாயகர் சிவனை வலம் வரும் நேரத்தில் அண்ட சராசரங்கள் முழுவதையும் சுற்றி வந்தது.</p><p> </p>

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.