முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 66

மயில் விருத்தத்தின் நான்காம் பாடல் இது.  இந்தப் பாடலில் நரசிம்மர் நர்த்தனமிடுகிறார்.  இதற்கு முன்னால் தேவேந்திர சங்க வகுப்பில்

Updated On : 21 நவம்பர், 2015 at 10:26 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:06 PM

மயில் விருத்தத்தின் நான்காம் பாடல் இது.  இந்தப் பாடலில் நரசிம்மர் நர்த்தனமிடுகிறார்.  இதற்கு முன்னால் தேவேந்திர சங்க வகுப்பில்


தரணியி லரணிய முரணிர ணியனுடல்
தனைநக நுதிகொடு
சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி

என்று நாராயணியான அம்பிகையை நரசிம்மமாகச் சித்திரித்ததைப் பார்த்தோம்.  இந்தப் பாடலில் நரசிம்மமே தோன்றுகிறது.  திருமாலை அடுக்கடுக்கான நாமங்களால் சொல்லித் துதிக்கிறார் அருணகிரியார்.  இப்போது பாடலைப் பார்ப்போம்.  பதிவைக் கேட்போம்.  பொருளை நாளை பார்ப்போம்.

</p><p><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/234029098&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p> </p><p>யுககோடி முடிவின் மண் டியசண்ட மாருதம்<br />   உதித்ததென் றயன் அஞ்சவே<br /><br />ஒருகோடி அண்டர்அண் டங்களும் பாதாள<br />   லோகமும் பொற்குவடுறும்<br /><br />வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு<br />   விசும்பிற் பறக்க விரிநீர்<br /><br />வேலைசுவ றச்சுரர் நடுக்கங் கொளச்சிறகை<br />   வீசிப் பறக்கு மயிலாம்<br /><br />நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்தநர<br />   கேசரி முராரி திருமால்<br /><br />நாரணன் கேசவன் சீதரன் தேவகீ<br />   நந்தனன் முகுந்தன் மருகன்<br /><br />முககோடி நதிகரன் குருகோடி அநவரதம்<br />   முகிலுலவு நீலகிரிவாழ்<br /><br />முருகன்உமை குமரன் அறு முகன்நடவு விகடதட<br />   மூரிக் கலாப மயிலே.</p>

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.