பகுதி - 67
மயில் விருத்தத்தின் நான்காம் பாடல் இது.
மயில் விருத்தத்தின் நான்காம் பாடல் இது.
பதச் சேதம் | சொற் பொருள் Advertisement |
யுக கோடி முடிவில் மண்டிய சண்டமாருதம் உதித்தது என்று அயன் அஞ்சவே | யுககோடி: யுகத்தின் கடைசியில், இறுதியில் (இந்தக் கோடி, அந்தக் கோடி என்பதைப் போல) மண்டிய: அடர்ந்த, திரண்ட, சண்டமாருதம்: வலிய காற்று, யுகாந்த காலத்துச் சூறாவளி, அயன்: பிரமன். |
ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள லோகமும் | அண்டர் அண்டம்: தேவர் உலகம், |
பொன் குவடு உறும் வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்து இரு விசும்பில் பறக்க | பொன்குவடு: பொற்சிகரம், இருவிசும்பு: நீண்ட வானம் |
விரிநீர் வேலை சுவறச் சுரர் நடுக்கங் கொளச் சிறகை வீசிப் பறக்கு மயிலாம் | விரிநீர்: பரந்த நீரை (உடைய) வேலை: கடல், சுவற: வறள, சுரர்: தேவர் |
நககோடி கொண்ட அவுணர் நெஞ்சம் பிளந்த நரகேசரி முராரி திருமால் | அவுணர்: அரக்கம், நரகேசரி: நரசிம்மம் (கேசரி: சிம்மம்), முராரி: முரன் என்னும் அரக்கனை மாய்த்தவன். |
நாரணன் கேசவன் சீதரன் தேவகீநந்தனன் முகுந்தன் மருகன் | கேசவன்: கேசி என்ற அசுரனை வதைத்தவன்; சீதரன்: ஸ்ரீயை (திருமகளை) மார்பில் தரித்வன், நந்தனன்: குமாரன் |
முககோடி நதிகரன் குருகு ஓடி அநவரதம் முகில் உலவு நீலகிரி வாழ் | முககோடி நதிகரன்: கங்கை, கங்கையில் (தவழ்ந்ததான) ஜோதி, குருகு: வெண்ணிறம், அநவரதம்: எப்போதும், நீலகிரி: திருத்தணிகை |
முருகன் உமை குமரன் அறுமுகன் நடவு விகட தட மூரிக் கலாப மயிலே. | நடவு: நடத்தும், செலுத்தும், விகட தட: அழகும் பெருமையும், மூரி: வலிய, வலிமை வாய்ந்த |
</p><p align="justify"> </p><p align="center"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/234029098&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p align="justify"> </p><p align="justify"> </p><p align="justify"><strong>......... பதவுரை .........</strong><br /><br /><strong>யுக</strong> ... (சத்ய யுகம், கிருத யுகம், துவாபர யுகம், கலி யுகம் எனப்படும் நான்கு) யுகங்கள்</p><p align="justify"><strong>கோடி முடிவில்</strong> ... முடிவடைகின்ற கடைக்கோடியான காலத்திலே,<br /><br /><strong>மண்டிய</strong> ... கடுமையாக வீசும்,<br /><br /><strong>சண்ட மாருதம்</strong> ... சூறாவளிக் காற்று,<br /><br /><strong>உதித்ததென்று</strong> ... (இப்போதே) எழுந்துவிட்டதோ என்று,<br /><br /><strong>அயன் அஞ்சவே</strong> ... பிரமன் பயம் கொள்ளவும்,<br /><br /><strong>ஒரு கோடி அண்டர் அண்டங்களும்</strong> ... கோடிக்கணக்கான தேவலோகங்களும்,<br /><br /><strong>பாதாள லோகமும்</strong> ... கீழ் உலகங்களும்,<br /><br /><strong>பொன் குவடு உறும்</strong> ... பொன் மயமான சிகரங்களை உடைய,<br /><br /><strong>வெகு கோடி மலைகளும்</strong> ... மிகப்பல கோடிக் கணக்கான மலைகளும்,<br /><br /><strong>அடியினில்</strong> ... மயில் அடியெடுத்து வைக்கும் போது,<br /><br /><strong>தகர்ந்து</strong> ... தூளாகி,<br /><br /><strong>இரு விசும்பில் பறக்க</strong> ... நீண்ட வானத்திலே (தூளாகப்) பறக்கவும்,<br /><br /><strong>விரி நீர் வேலைச் சுவற</strong> ... பரந்த நீர்ப் பரப்பை உடைய கடல் வற்றிப் போகவும்,<br /><br /><strong>சுரர் நடுக்கங் கொள</strong> ... தேவர்கள் அச்சமடையவும்,<br /><br /><strong>சிறகை வீசிப் பறக்கும் மயிலாம்</strong> ... தன்னுடைய தோகைகளை வீசிப் பறக்கும் மயில் (இப்படிப்பட்டது யாருடைய மயில் என்று கேட்டால்)</p><p align="justify"><strong>நககோடி கொண்டு</strong> ... கோடானுகோடி நகங்களைத் தன் (எண்ணற்ற கரங்களில்) கொண்டு,<br /><br /><strong>அவுணர் நெஞ்சம் பிளந்த</strong> ... அரக்கர்களின் மார்பைப் பிளந்த,<br /><br /><strong>நரகேசரி</strong> ... நரசிம்ம மூர்த்தியும்,<br /><br /><strong>முராரி</strong> ... முரன் எனற அசுரனைக் கொன்றவனும்,<br /><br /><strong>திருமால்</strong> ... மாலோனும்,<br /><br /><strong>நாரணன்</strong> ...நாராயணனும்,<br /><br /><strong>கேசவன்</strong> ... கேசி என்ற அசுரனைக் கொன்றவனும்,<br /><br /><strong>சீதரன்</strong> ... மஹாலட்சுமியை தனது திரு மார்பில் தரித்தவனும்,<br /><br /><strong>தேவகீ நந்தனன்</strong> ... தேவகியின் திருக் குமாரனும்,<br /><br /><strong>முகுந்தன்</strong> ... முக்தியையும் உலக நலங்களையும் வழங்குபவனும், (மு: முக்தி, கு: உலக நலன்—இவற்றை வழங்குபவர் என்பது வாரியார் சுவாமிகளின் விளக்கம்)—ஆன மஹாவிஷ்ணுவின்<br /><br /><strong>மருகன்</strong> ... மருமகனும்,<br /><br /><strong>முககோடி நதிகரன்</strong> ... ஆயிரம் முகங்களை உடைய கங்கையினால் சுமக்கப்பட்ட ஜோதி வடிவினன், (சிவனுடைய நெற்றிவிழி சிந்திய பொறிகளை அக்கினி சுமந்து சென்று கங்கையில் விட, கங்கை சரவணப் பொய்கையில் விட அங்கே தோன்றிய ஜோதி ஸ்வரூபன்)<br /><br /><strong>குருகு ஓடி</strong> ... வெள்ளை நிறமாக பரவிச் செல்லும்,<br /><br /><strong>அநவரதம் முகிலுலாவு</strong> ... மேகங்கள் எப்பொழுதும் தவழ்கின்ற,<br /><br /><strong>நீலகிரி வாழ்</strong> ... திருத்தணி மலையில் வீற்றிருக்கும்,<br /><br /><strong>முருகன் உமை குமரன் அறுமுகன்</strong> ... முருக மூர்த்தி, பார்வதிபாலன், ஆறுமுகக் கடவுள்,<br /><br /><strong>நடவு</strong> ... செலுத்துகின்ற,<br /><br /><strong>விகட</strong> ... அழகும்,<br /><br /><strong>தட</strong> ... பெருமையும்,</p><p align="justify"><strong>மூரிக் கலாப மயிலே</strong> ... மிக்க வலிமையும் கொண்ட தோகைகளை உடைய மயிலே அது.<br /><br />நரசிம்மமாகவும் மற்ற வடிவங்களிலும் அவதரித்து அசுரர்களை அழித்த திருமால் மருகனான; கங்கை நதி சுமந்த ஜோதியான, திருத்தணியில் வீற்றிருப்பவனான முருகனுடைய மயில் கடல் வற்றும்படியாகவும், மலைகள் சிதறி வானில் பறக்கும்படியாகவும் சிறகை வீசிப் பறக்கிறது.</p><p align="justify"><br />காப்புச் செய்யுளான சந்தன பாளித என்ற பாடலைத் தவிர்த்து மயில் விருத்தத்தின் மற்ற பாடல்களிலெல்லாம்.திருத்தணிகை மலையைப் பற்றிய குறிப்பு தொடர்ந்து வருவதைக் காணலாம்.</p>