பகுதி - 70
மயில் விருத்தத்தின் ஐந்தாம் பாடலில், உலகம்மை ஈன்றதாகிய உலகங்கள் எல்லாவற்றையும் தன்னுடைய பேடையின் முட்டைகளைக் காப்பதுபோல் தன் சிறகால்
மயில் விருத்தத்தின் ஐந்தாம் பாடலில், உலகம்மை ஈன்றதாகிய உலகங்கள் எல்லாவற்றையும் தன்னுடைய பேடையின் முட்டைகளைக் காப்பதுபோல் தன் சிறகால் காக்கின்ற மயிலைக் கண்டோம். ஆறாவதான இந்தப் பாடலிலும் மயில் அண்டங்களை தன் சிறகால் மூடிக் காக்கிறது; அசுர அம்சங்களை அதே சிறகின் வீச்சால் பொடிசெய்கிறது. இந்தப் பாடலில் வரும் கெங்காதரன், கங்கையைத் தரிப்பவனான சிவனைக் குறிப்பது. அவன் ஐம்முகச் சிவன், இவன் அறுமுகச் சிவன் என்பதனால் முருகனுக்கும் கங்காதரன் என்ற பெயரைச் சொல்லலாம் என்பது திருமுருக கிருபானந்த சுவாமிகளின் கருத்து. கங்கையால் தரிக்கப்பட்டவன் என்ற பொருளில், கங்காதரன் என்பது பொருந்தும் என்றும் பொருள் சொல்வதுண்டு. முருகன் இசையிலே குடியிருப்பவன் ஆதலாலே, சுரங்களைச் சுராலயம் என்கிறார். பாடலைப் பார்ப்போம்.
சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்
சகல லோகமு நடுங்கச்
சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அமரருஞ்
சஞ்சலப் பட உமையுடன்
கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த
காரம் பிறந்திட நெடுங்
Advertisement
ககனகூட முமேலை முகடுமூ டியபசுங்
கற்றைக் கலாப மயிலாஞ்
சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள
சித்ரப் பயோ தரகிரித்
தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன்
திருத்தணிமகீரதன் இருங்
கெங்கா தரன்கீதம் ஆகிய சுராலய
க்ருபாகரன் கார்த்தி கேயன்
கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி
கிழிபட நடாவு மயிலே.
</p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/234614383&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p align="JUSTIFY"> </p>