பகுதி - 72
ஆறாம் பாடலிலே பயோதரம் என்பதற்குத் தனம் என்று பொருள் பார்த்தோம். இந்த ஏழாம் பாடலில் வரும் பயோததி, பய உததி; பாற்கடல்.
ஆறாம் பாடலிலே பயோதரம் என்பதற்குத் தனம் என்று பொருள் பார்த்தோம். இந்த ஏழாம் பாடலில் வரும் பயோததி, பய உததி; பாற்கடல். வையாளி வரும் மயிலை இந்தப் பாடலில் காட்டுகிறார். வையாளி என்றால் குதிரை செல்லும் பாதை, நடை. மயிலை ‘பட்சியெனும் உக்ர துரகம்’ என்று பாடுவார். ஆகையாலே, மயிலின் நடை, குதிரையின் நடையாகச் சித்திரிக்கப்படுகிறது. இந்தப் பாடலில் அம்பிகையின் பெயர்கள் அடுக்கி வருகின்றன. மயில் விருத்தத்தின் ஏழாம் பாடல் இது:
தீரப் பயோததி திக்குமா காயமுஞ்
செகதலமு நின்று சுழலத்
திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத்
தீக்கொப் புளிக்க வெருளும்
பாரப் பணாமுடி அநந்தன்முதல் அரவெலாம்
பதைபதைத் தேநடுங்கப்
Advertisement
படர்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
பச்சைப்ர வாள மயிலாம்
ஆரப்ர தாபபுள கிதமதன பாடீர
அமிர்தகல சக்கொங் கையாள்
ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லிபர
மாநந்த வல்லி சிறுவன்
கோரத்ரி சூலத்ரி யம்பக ஜடாதார
குருதரு திருத்தணி கைவேள்
கொடியநிசி சரர்உதரம் எரிபுகுத விபுதர்பதி
குடிபுகுத நடவு மயிலே.
</p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/234630822&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p align="JUSTIFY"> </p>