முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 73

மிகுந்த கீர்த்தியுடையதும், அலங்கார, புளகாங்கிதம் கொண்டதும், அமுதக் கலசங்களைப் போன்ற தனங்களை உடையவள்,

Updated On : 28 நவம்பர், 2015 at 11:05 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:09 PM

பதச் சேதம்

சொற் பொருள்

தீரப் பயோததி திக்கும் ஆகாயமும்  செகதலமும் நின்று சுழலத்
 
தீர: நன்றாக, முழுமையாக.  பயோததி: பாற்கடல்; பயோததி தீர: பாற்கடல் முழுவதும்
திகழ்கின்ற முடி மவுலி சிதறி விழ வெம் சிகைத் தீக்கொப்புளிக்க வெருளும் பாரப் பணாமுடி அநந்தன் முதல்
 
தலையில் விளங்குவதாகிய மகுடம், வெம்சிகை: கொடிய உச்சியிலுள்ள படங்கள், வெருளும்: அஞ்சும்; பார: கனத்த; பணாமுடி: (நாக) மாணிக்கத்தைக் கொண்ட தலை; அநந்தன்: அந்தமில்லாதவன் அநந்தன்—ஆதிசேடன்.
அரவெலாம் பதைபதைத்தே நடுங்கப்
 
 
படர் சக்ரவாளகிரி துகள் பட வையாளி வரு பச்சை ப்ரவாள மயிலாம்
 
சக்ரவாளகிரி: அண்டத்தைச் சுற்றி வளைத்திருக்கும வட்டமான மலை; வையாளி: ஒய்யாரமாக இடும் நடை, குதிரையின் நடை; ப்ரவாளம்: பவளம்
ஆர ப்ரதாப புளகித மதன பாடீர அமிர்த கலசக் கொங்கையாள்
 
ஆர: மிகவும்; ப்ராதபம்: புகழ், கீர்த்தி, புளகிதம்:புளாகாங்கிதம், பாடீரம்: சந்தனம்,
ஆடு மயில் நிகர் வல்லி அபிராம வல்லி பரமாநந்த வல்லி சிறுவன்
 
 
கோர த்ரிசூல த்ரியம்பக ஜடாதார குரு தரு திருத்தணிகைவேள்
 
த்ரியம்பக: முக்கண் உடைய, ஜடாதர: ஜடாமுடியைக் கொண்ட, குருதரு: குருவான சிவன் பெற்ற,
கொடிய நிசிசரர் உதரம் எரி புகுத விபுதர் பதி குடி புகுத நடவு மயிலே.
 
நிசிசரர்: இரவில் உலவுபவர்—அரக்கர், உதரம்: வயிறு; விபுதர் பதி: தேவருலகம்; நடவு: நடத்திய

</p><p> </p><p><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/234630822&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /><br /><strong>தீர</strong> ... மிகவும் நன்றாக—முழுமையாக <br /><br /><strong>பயோததி</strong> ... பய (payas) பால், உததி: கடல், பாற்கடல் முதலான எல்லாக் கடல்களும்,<br /><br /><strong>திக்கும்</strong> ... எட்டுத் திசைகளும்,<br /><br /><strong>ஆகாயமும்</strong> ... வானமும்,<br /><br /><strong>செக தலமும்</strong> ... பூவுலகும்,<br /><br /><strong>நின்று சுழல</strong> ... இடைவிடாமல் சுழலும்படியும்,<br /><br /><strong>திகழ்கின்ற</strong> ... விளங்குகின்ற,<br /><br /><strong>முடி மவுலி</strong> ... ஆயிரம் (தலைகளிலுமுள்ள மாணிக்ததை ஏந்திய படங்களாகிய) பணாமுடிகளும் கீழே விழுந்து சிதறவும்,<br /><br /><strong>வெம் சிகை தீக் கொப்புளிக்க</strong> ... கொடிய தலையின் உச்சியிலிருந்து (வாயிலிருந்து) நெருப்பை உமிழவும்,<br /><br /><strong>வெருளும்</strong> ... பயத்தை அடைந்த,<br /><br /><strong>பாரப் பணாமுடி</strong> ... கனத்த படக் கூட்டங்களை உடைய,<br /><br /><strong>அநந்தன் முதல் அரவெலாம்</strong> ... ஆதிசேடன் முதலான பாம்புக்<br />கூட்டங்கள்,<br /><br /><strong>பதை பதைத்து நடுங்க</strong> ... விக்கித்துப் போய், அச்சமுற்று நடுங்கவும்,<br /><br /><strong>படர் சக்ரவாளகிரி</strong> ... எங்கும் பரந்துள்ள (அண்டத்தைச் சுற்றியுள்ள சுவரைப் போன்ற) சக்ரவாளகிரி (என்ற மலை),<br /><br /><strong>துகள் பட</strong> ... தூள் தூளாகப் போகவும்,<br /><br /><strong>வையாளி வரு</strong> ... ஒய்யார நடையிட்டு வருகின்ற,<br /><br /><strong>பச்சைப் பிரவாள மயிலாம்</strong> ... பச்சையும் பவளமும் கலந்த நிறத்தையுடைய தோகையைக் கொண்ட மயிலாகும்</p><p> </p><p><strong>ஆர</strong> ப்ராதப... மிக்க கீர்த்தி உடையதாய்,<br /><br /><strong>புளகித</strong> ... புளகாங்கிதம் கொண்டதாய்<br /><br /><strong>மதன</strong> ... பெருமிதம் மிகுந்ததாய்,<br /><br /><strong>பாடீர</strong> ... சந்தனப் கலவைகளைப் பூசியதாய் (விளங்கும்),<br /><br /><strong>அமிர்த கலச கொங்கையாள்</strong> ... அமிர்தம் நிறைந்த கலசங்களைப் போன்ற மார்பகங்களை உடையவளும்,</p><p><br /><strong>ஆடு மயில் நிகர் வல்லி</strong> ... தோகையை விரித்து ஆடும் மயிலைப்<br />போன்றவளும், (வல்லி: கொடி) <br /><br /><strong>அபிராம வல்லி</strong> ... பேரழகு உடையவளும், (<em>abhi-rāma</em>. That which is beautiful, lovely, pleasing, delightful—தமிழ்ப் பேரகராதி)<br /><br /><strong>பரமானந்த வல்லி</strong> <strong>சிறுவன்</strong>... பேரானந்தத்தில் நிலைகொண்டிருப்பவளுமான உமையம்மையின் மைந்தன்,<br /><br /><strong>கோர த்ரிசூல</strong> ... பயங்கரமான திரிசூலத்தை ஏந்தியவரும்,<br /><br /><strong>த்ரியம்பக</strong> ... முக்கண்ணரும்<br /><br /><strong>ஜடாதார</strong> ... சடாமுடி தாங்கியவனும்,<br /><br /><strong>குரு</strong> ... லோக குருவுமான சிவபெருமான்,<br /><br /><strong>தரு</strong> ... தந்தருளியவனும்,<br /><br /><strong>திருத்தணிகை வேள்</strong> ... திருத்தணிகையில் வீற்றிருப்பவனுமான முருகவேள்,<br /><br /><strong>கொடிய நிசிசரர் உதிரம் எரி புகுத</strong> ... (எப்போதும்) கொடுமைகளையே புரிந்து வந்தவர்களான அசுரர்களுடைய வயிற்றிலே தீப்பாயவும், <br /><br /><strong>விபுதர் பதி குடி புகுத</strong> ... (விபுதர்: தேவர்) தேவர்கள் தங்கள் பதியான தேவலோகம் (அசுரர்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்கள் மீண்டும்) குடியேறவும்,<br /><br /><strong>நடவு மயிலே</strong> ... (இவையெல்லாம் நடைபெறுமாறு) செலுத்திய மயிலல்லவா அது.</p><p>பாற்கடலும் இதர சமுத்திரங்களும் எட்டுத் திக்குகளும் விண்ணுலகமும் மண்ணுலகும் இடைவிடாமல் சுழற்சியடையும்படியும்; ஆதிசேடன் முதலான எல்லா நாகங்களும் (அதனதன்) தலைகளிலுள்ள மாணிக்கமானது தெறித்து விழவும்; (ஆதிசேடன் வாயிலிருந்து) நெருப்பைக் கக்குமாறும்; அச்சத்தால் நடுக்கம் எய்துமாறும்; அண்டத்தைச் சுற்றி வளைத்திருக்கிற சக்ரவாளகிரி தூள்தூளாகப் போகும்படியும்—இவ்வளவும் ஏற்படும்படியாக—ஒய்யார நடையிட்டு வருகிற மயில், யாருடையதோ என்று கேட்டால்,)<br /> </p><p>மிகுந்த கீர்த்தியுடையதும், அலங்கார, புளகாங்கிதம் கொண்டதும், அமுதக் கலசங்களைப் போன்ற தனங்களை உடையவள், ஆடுகின்ற மயிலை நிகர்த்தவள், அழகு நிறைந்த கொடிபோன்றவள்—இப்படிப்பட்ட உமையம்மையின் குமாரன், திரிசூலத்தை ஏந்தும் முக்கண்ணர், ஜடாதரர், உலககுருவானவர்—இப்படிப்பட்ட சிவன் அருளியவன்……</p><p> </p><p>கொடிய அசுரர்களுடைய வயிற்றிலே தீப்பாயும்படியாக (அவர்களை அழித்து, தேவலோகத்தை மீட்டதாலே) தேவர்கள் தங்கள் உலகில் மீண்டும் குடியேறும்படியாக போரில் முருகனுடைய வாகனமாக விளங்கிய மயிலே அது.</p>

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.