முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 74

மயில் விருத்தத்தின் எட்டாவது பாடலில்—இதுவரையில் ஒலித்துக் கொண்டிருக்கும் அதே சந்தமென்றாலும்—வேகம் அதிகரிப்பதைப் பார்க்கலாம்.

Updated On : 28 நவம்பர், 2015 at 12:06 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:09 PM

மயில் விருத்தத்தின் எட்டாவது பாடலில்—இதுவரையில் ஒலித்துக் கொண்டிருக்கும் அதே சந்தமென்றாலும்—வேகம் அதிகரிப்பதைப் பார்க்கலாம்.  ஒலிப்பதிவிலும் கேட்கலாம்.  இந்தப் பாடலில் வாசுகி என்றொரு பெயர் வருவதைப் பார்க்கலாம்.  இது (எண்திசை யானைகளைப் போல) உலகைத் தாங்கியுள்ள எட்டு நாகங்களிலொன்று.  கிழக்கு திசையைத் தாங்குவது.  பிற நாகங்கள்: அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன். இத்தனை நாகங்களையும் எடுத்து உதறுகின்றது மயில்.  இறுதியடிகளில் ஒலிக்கும் சந்த ஜாலம் இன்பம் பயப்பது.

செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை
   சிந்தப் புராரி யமிர்தந்

திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
   தீவிஷங் கொப்புளிப்பச்

Advertisement

சக்ரகிரி சூழவரு மண்டலங் கள்சகல
   சங்கார கோர நயனத்

தறுகண்வா சுகிபணா முடியெடுத் துதறுமொரு
   சண்டப்பர சண்டமயிலாம்

விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய
   விருத்தன் திருத்த ணிகைவாழ்

வேலாயு தன்பழ வினைத்துயர் அறுத்தெனை
   வெளிப்பட வுணர்த்தி யருளித்

துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச்
   சுவாமிவா கனமா னதோர்

துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல
   துஷ்டர் நிஷ்டூ ரமயிலே.

</p><p align="justify"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/235061048&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.