பகுதி - 76
மயில் விருத்தத்தின் ஒன்பதாம் பாடலை இன்று எடுத்துக் கொள்கிறோம். அகில், மருக்கொழுந்து மணமெல்லாம் வீசுகின்ற திருத்தணிகையில்
மயில் விருத்தத்தின் ஒன்பதாம் பாடலை இன்று எடுத்துக் கொள்கிறோம். அகில், மருக்கொழுந்து மணமெல்லாம் வீசுகின்ற திருத்தணிகையில் வீற்றிருக்கும் முருகனுடைய மயில் வையாளி வருவதைப் பாருங்கள், கேளுங்கள்.
சிகரதம னியமேரு கிரிரசத கிரிநீல
கிரியெனவும் ஆயிரமுகத்
தெய்வநதி காளிந்தி யெனநீழல் இட்டுவெண்
திங்கள்சங் கெனவும்ப்ரபா
நிகரெனவும் எழுதரிய நேமியென உலகடைய
நின்றமா முகில் என்னவே
நெடியமுது ககனமுக டுறவீசி நிமிருமொரு
நீலக் கலாப மயிலாம்
அகருமரு மணம்வீசு தணிகைஅபி ராமவேள்
அடியவர்கள் மிடிய கலவே
அடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்
அலங்கற் குழாம் அசையவே
மகரகன கோமளக் குண்டலம் பலஅசைய
வல்லவுணர் மனம்அசைய மால்
வரை அசைய உரகபிலம் அசையஎண் டிசைஅசைய
வையாளி யேறு மயிலே.
</p><p> </p><p><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/235061548&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p>பொருளை நாளைக்கு விரிவாகக் காண்போம்.</p>
Advertisement