பகுதி - 206
இன்றைய திருவாவினன்குடித் திருப்புகழ் மிகப்பரவலாக அறியப்பட்டது; முருகனடியார்கள் பலரும் ஓதுவது. மிக எளிய சந்த அமைப்பைக் கொண்டது. இதற்கு ‘அபசார நிந்தை’ என்றொரு பாடமும் இருக்கிறது.
இன்றைய திருவாவினன்குடித் திருப்புகழ் மிகப்பரவலாக அறியப்பட்டது; முருகனடியார்கள் பலரும் ஓதுவது. மிக எளிய சந்த அமைப்பைக் கொண்டது. இதற்கு ‘அபசார நிந்தை’ என்றொரு பாடமும் இருக்கிறது. ஆனால் பழைய பிரதிகளில் ‘அபகார நிந்தை’ என்ற பாடமே இருப்பதாக குஹத்திரு தணிகைமணி செங்கல்வராய பிள்ளையவர்கள் குறிப்பிடுகிறார். முருகன் தனக்கு ஜெபமாலை தந்த நிகழ்வை குருநாதர் இந்தப் பாடலில் குறிப்பிடுகிறார். ‘சும்மா இரு சொல்லற’ என்று முருகன் தனக்கு உபதேசித்ததை ‘உபதேச மந்திரப் பொருளாலே’ என்று சொல்கிறார்.
தனதான தந்தனத் தனதானா
அபகார நிந்தைபட் டுழலாதே
Advertisement
அறியாத வஞ்சரைக் குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானி னைந்தருட் பெறுவேனோ
இபமாமு கன்தனக் கிளையோனே
இமவான்ம டந்தையுத் தமிபாலா
ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/257928523&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>