முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 209

கள்ளத்தனமான வியாபாரத்தில் கைதேர்ந்த துஷ்டர்களும்; ஆணவமே உருவெடுத்ததைப் போன்றவர்களும்......

Updated On : 12 ஏப்ரல், 2016 at 12:50 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:30 PM

பதச் சேதம்

சொற் பொருள்

திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள் செகத்து நீலிகள் கெட்ட பரத்தைகள் மிக நாணார்

Advertisement

விக்ரம: சாமர்த்தியம் கொண்ட; துட்டி: துட்டன், துட்டி.  துஷ்டர்கள்; மத(ர்)த்த: ஆணவம் கொண்ட; துர்ச்சன: துர்ஜன—தீய குணம் கொண்ட; பொட்டி: தந்திரக்காரர்கள்; நாணார்: நாணமற்றவர்கள்;

சிலைக்கு நேர் புருவ பெரு நெற்றிகள் எடுப்பு மார்பிகள் எச்சில் உதட்டிகள்

சிரித்து மாநுடர் சித்தம் உருக்கிகள் விழியாலே

சிலைக்கு: வில்லுக்கு; நெற்றிகள், மார்பிகள், உதட்டிகள், உருக்கிகள்: நெற்றியை உடையவர்கள், மார்பை உடையவர்கள், உதட்டை உடையவர்கள், உருகச் செய்பவர்கள்;

வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள் மிகுத்த பாவிகள் வட்ட முகத்தினை மினுக்கி ஓலைகள் பித்தளையில் பணி மிக நீறால்

வெருட்டி: அஞ்சச் செய்து; பப்பர(ர்): கூத்தாடிகள்; மட்டைகள்: வீணர்கள்; ஓலை: காதில் அணியும் ஓலை; நீறால்: சாம்பலால்

விளக்கியே  குழை இட்ட புரட்டிகள் தமக்கு மால் கொடு நிற்கும் மருள் தனை விடுத்து தான் ஒருமித்து இரு பொன் கழல் பணிவேனோ

விளக்கி: துலக்கி; புரட்டிகள்: புரட்டு, மாறுபட்ட பேச்சை உடையவர்கள்; மால்: மயக்கம்; மருள்: மயக்கம்;

தரித்த..............என தாளம்

 

 

தட கை தாளமும் இட்டு இயல் மத்தளம்  இடக்கை தாளமும் ஒக்க நடித்து ஒளி தரித்த கூளிகள் தத்திமி தித்தென கண பூதம்

தடக்கை: பெரிய கை; இடக்கை: இடது கையால் வாசிக்கப்படும் தாளக்கருவி; நடித்து: நடனமாடி; ஒளிதரித்த: ஒளிகொண்ட; கூளி: பேய்;

அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும் இரத்ந மா முடியைக் கொ(ண்)டு உக கழல் அட கையாடி நிணத்தையே எடுத்து உ(ண்)ண அறவே தான்

அருக்கனார்: சூரியனார்; ப்ரபை: ஒளி; இரத்ந: ரத்தின; உக: சிந்த, சிதற; கழலாடி: கழங்கு ஆடி; நிணம்: கொழுப்பு; அறவே: அடியோடு, முழுக்க;

அரக்கர் சேனைகள் பட்டு விழ செறி திருக்கை வேல் தனை விட்டு அருளி பொரும் அருள் குகா அருணை பதி உற்று அருள் பெருமாளே.

செறி: சேர்ந்துள்ள; பொரும்: போரிடும்; அருணைப் பதி: திருவண்ணாமலைத் தலம்;

</p><p align="justify"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/258430550&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"><strong>திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள் செகத்து நீலிகள் கெட்ட பரத்தைகள் மிக நாணார்</strong> ... கள்ளத்தனமான வியாபாரத்தில் கைதேர்ந்த துஷ்டர்களும்; ஆணவமே உருவெடுத்ததைப் போன்றவர்களும்; தீயதன்மையை உடைய தந்திரக்காரர்களும்; உலகத்தில் வேடமிட்டு வஞ்சிப்பவர்களும்; கெட்டவர்களான பரத்தைகளும்; எதற்கும் வெட்கப்படாதவர்களும்;</p><p align="justify"><em>(நீலி—விளக்கத்தை நேற்றைய தவணையில் காண்க)</em></p><p align="justify"><em> </em></p><p align="justify"><strong>சிலைக்கு நேர் புருவப் பெரு நெற்றிகள் எடுப்பு மார்பிகள் எச்சில் உதட்டிகள் சிரித்து மாநுடர் சித்தம் உருக்கிகள் விழியாலே வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள்</strong> ... வில்லை ஒத்த புருவமும்; பரந்த நெற்றியும்; எடுப்பான மார்புகளும்; எச்சில் ஊறும் உதடுகளும்(கொண்டு) சிரிப்பாலே மனிதர்களை மனமுருகச் செய்பவர்களும்; பார்வையாலேயே அச்சத்தை விளைவித்து, மயக்கி, மேலே வந்து விழுகின்ற கூத்தாடிகளும்; பயனற்ற மக்களும்;</p><p align="justify"><strong>மிகுத்த பாவிகள் வட்ட முகத்தினை மினுக்கி ஓலைகள் பித்தளையில் பணி மிக நீறால் விளக்கியே குழை இட்ட புரட்டிகள்</strong> ... பெரிய பாவிகளும்; வட்டமான முகத்தை அலங்காரங்களால் மினுக்கச் செய்பவர்களும்; பித்தளையால் ஆன காதோலையை, சாம்பலைப் போட்டுத் தேய்த்துப் பளபளக்கச் செய்து (பொன்னைப் போலத் தோற்றமளிக்க வைத்து), காதிலே அணிந்திருக்கும் புரட்டுக்காரிகளும்; (இப்படிப்பட்டவர்களான பெண்களின்மேல்),</p><p align="justify"><strong>தமக்கு மால் கொடு நிற்கும் மருள் தனை விடுத்து தான் ஒருமித்து இரு பொன் கழல் பணிவேனோ</strong> ... மனம் மயங்கி நின்று சித்தம் கலங்குவதை ஒழித்து, நான் மனம் ஒன்றி உன்னுடைய இரண்டு பாதங்களிலும் பணிவேனோ?</p><p align="justify"><strong>தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என தாளம் தடக் கை தாளமும் இட்டு இயல் மத்தளம் இடக்கை தாளமும் ஒக்க</strong> ... தரித்த தோகண… திக்குகு என்றெல்லாம் ஒலியெழும்படிப் பெரிய கரங்களால் தாளமிட்டுக்கொண்டு, பொருந்தியதான மத்தளம், இடக்கை போன்ற கருவிகள் ஒன்றாக ஒலியெழுப்ப,</p><p align="justify"><strong>நடித்து ஒளி தரித்த கூளிகள் தத்திமி தித்தென கண பூதம் அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும் இரத்ந மா முடியைக் கொ(ண்)டு உகக் கழல் அடக் கையாடி நிணத்தை எடுத்து உ(ண்)ண</strong> ... (அந்தத் தாள ஒலிக்குக்குத் தக) நடனமாடும் ஒளிகொண்ட பேய்களும்; தத்திமி தித்தென்று (குதிக்கும்) பூதக்கூட்டங்களும்; சூரியனுடைய ஒளியைப் போலச் சுடர்விடும் ரத்தினங்களால் ஆன கிரீடங்களிலிருந்து (அந்த ரத்தினங்கள்) சிந்தி, (அவற்றை) கழங்கு—கழற்சிக்காய்—போல எறிந்து விளையாடியும்; மாமிசத்தையும் கொழுப்பையும் எடுத்து உண்ணும்படியும்;</p><p align="justify"><strong>அறவே தான் அரக்கர் சேனைகள் பட்டு விழச் செறி திருக்கை வேல் தனை விட்டு அருளிப் பொரும் அருள் குகா அருணைப் பதி உற்று அருள் பெருமாளே.</strong> ... அரக்கர்களுடைய சேனை அடியோடு அழிந்துபடும்படி, திருக்கையில் விளங்குவதான வேலை எறிந்து போரிட்டருளிய குகனே!  திருவண்ணாமலைத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!</p><p align="justify"><em> </em></p><p align="justify"><u><strong><em>சுருக்க உரை</em></strong></u></p><p align="justify"><em>தரித்த தோகண தக்குகு திக்குகு என்றெல்லாம் ஒலிக்கும் பறைகளுடைய தாளங்களுக்கு ஏற்ப நடனமாடும் பூதகணங்கள், போர்க்களத்தில் அரக்கர்களுடைய கிரீடங்களிலிருந்து சிதறிக் கிடக்கும் ரத்தினக் கற்களைக் கழங்காடுவதைப் போல எறிந்து விளையாடியும்; களத்தில் கிடக்கும் மாமிசத்தையும் கொழுப்பையும் அள்ளி உண்ணும்படியும் அரக்க சேனைகளைக் திருக்கையில் ஏந்தியுள்ள வேலாயுதத்தைச் செலுத்தி அழித்தவனே!  திருவண்ணாமலையிலே வீற்றிருக்கும் பெருமாளே!</em></p><p align="justify"><em>திருட்டு வியாபாரத்திலே திறமை மிக்கவர்களும்; ஆணவமே வடிவமாக உள்ளவர்களும்; தீயகுணத்தைக் கொண்ட தந்திரசாலிகளும்; இவ்வுலகில் வேடமிட்டு வஞ்சிக்கும் நீலியைப் போன்றவர்களும்; வெட்கமற்றவர்களும்; வில்லைப் போன்ற புருவமும்; பரந்த நெற்றியும்; எடுப்பான மார்பும்; எச்சில் வடியும் உதடுமாக, பார்வையாலேயே ஆளை மயக்கி உள்ளத்தை அஞ்சவைத்து மேலே வந்துவிழுகின்ற கூத்தாடிகள்; பயனற்ற மக்கள்; பித்தளையால் ஆன காதோலையைச் சாம்பலால் தேய்த்துப் பளபளபாக்கிப் பொன் என்பதைப்போன்று தோன்றச் செய்து காதிலே ஆபரணமாக அணிபவர்கள்; மாறிமாறிப் பேசும் புரட்டர்கள்—என்று இத்தகையோர்கள்மீது மையல் கொண்டுநிற்கும் மயக்கத்தைக் கைவிட்டு; மனம் ஒருமைப்பட்டு, உன்னுடைய இரண்டு திருவடிகளிலும் என்றும் பணியும் பாக்கியத்தைத் தந்தருள வேண்டும்.</em></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.