முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 163

புகழ்பெற்ற வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த ஊரும் இதுவே; ஆகவே இது குன்னக்குடி என்றும் அறியப்படுகிறது

Updated On : 25 பிப்ரவரி, 2016 at 3:50 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:08 PM

பதச் சேதம்

சொற் பொருள்

நாம் மேவு குயிலாலும் மா மாரன் அயிலாலு(ம்) நாள் தோறும் மதி காயும் வெயிலாலும் நாம்: நாம, நாமம் என்றால் அச்சத்தை விளைக்கின்ற என்று பொருள்; மாரன்: மன்மதன்; அயில்: கூர்மையான பாணங்கள்;
நார் மாதர் வசையாலும் வேய் ஊதும் இசையாலும் நாடு ஆசை தரு மோக வலை ஊடே நார் மாதர்: அன்புகொண்ட பெண்கள்; வேய்: மூங்கில், புல்லாங்குழல்; நாடு: நாடுகின்ற, விரும்புகின்ற;
ஏமாறி முழு நாளும் மாலாகி விருதாவிலே வாரும் விழி மாதர் துயர் ஊடே ஏமாறி: ஏமாந்து; மாலாகி: மோகமுற்று; விருதா: வீணாக; வாரும் விழி: நீண்ட விழி;
ஏகாமல் அழியாத மேலான பதம் மீதில் ஏகி உ(ன்)னுடன் மேவ அருள்தாராய் ஏகாமல்: செல்லாமல்; பதம்: நிலை; உன்னோடு மேவ: உன்னோடு பொருந்தியிருக்க;
தாம் மோகமுடன் ஊறு பால் தேடி உரலோடு தான் ஏறி விளையாடும் ஒரு போதில் மோகமுடன்: ஆசையுடன்; ஊறு பால்: கறந்த பால்;
தாயாக வரு (ய)சோதை காணாது களவாடு தாமோதரன் முராரி மருகோனே தாமோதரன்: தாம உதரன் —கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன்; முராரி: முரன் என்ற அசுரனை வதைத்தவன்;
மா மாது வன மாது கார் மேவும் சிலை மாது மாலாகி விளையாடும் புய வீரா மாமாது: சிறந்த பெண்ணான இலக்குமி; வனமாது: வள்ளி; கார் மேவும்: மேகம் சூழ்ந்திருக்கும்; சிலை: மலை; புய வீரா: புயத்தை —தோளை — உடைய வீரனே
வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும் மாயூர கிரி மேவும் பெருமாளே. வான்நாடு: தேவலோகம், தேவர்கள்; தேனாறு புடைசூழும்: தேனாறு என்ற ஆறு சுற்றிலும் ஓடும்; மாயூரகிரி: குன்றக்குடி;

</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/248818801&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="JUSTIFY"><strong>நாம் மேவு குயிலாலும் மா மாரன் அயிலாலு(ம்)… </strong>அச்சத்தை விளைவிப்பதுபோலக் கூவுகின்ற குயிலாலும்; சிறந்த மன்மதனுடைய பாணங்களாலும்;</p><p align="JUSTIFY"><strong>நாள் தோறும் மதி காயும் வெயிலாலும்… </strong>ஒவ்வொரு நாளும் எரிக்கின்ற வெயிலைப் போல சுடுகின்ற நிலவாலும்;</p><p align="JUSTIFY"><strong>நார் மாதர் வசையாலும் வேய் ஊதும் இசையாலும்…</strong> அன்புகொண்ட பெண்கள் (என் நிலைமையைப் பார்த்துப் பேசும்) கேலிப் பேச்சாலும்; புல்லாங்குழலின் இன்னிசையாலும்;</p><p align="JUSTIFY"><strong>நாடு ஆசை தரு மோக வலை ஊடே…</strong> நாடச் செய்யும் (விருப்பத்தைத் தூண்டும்) ஆசையால் ஏற்படும் மோக வலைக்கு ஆட்பட்டு,</p><p align="JUSTIFY"><strong>ஏமாறி முழு நாளும் மாலாகி…</strong> ஏமாந்துபோய், நாள் முழுவதும் மோகத்தில் ஆழ்ந்து;</p><p align="JUSTIFY"><strong>விருதாவிலே வாரும் விழி மாதர் துயர் ஊடே ஏகாமல் … </strong>வீணாக, நீண்டவிழிகளைக் கொண்ட பெண்களால் உண்டாகும் துயரத்துக்குள்ளே செல்லாமல்;</p><p align="JUSTIFY"><strong>அழியாத மேலான பதம் மீதில் ஏகி…</strong> அழிவற்றதும் மேலானதுமான நிலையின் மீதில் (கவனத்தைச் செலுத்தி, அந்த வழியிலே) நடந்து</p><p align="JUSTIFY"><strong>உ(ன்)னுடன் மேவ அருள்தாராய்…</strong> உன்னோடு பொருந்தியிருப்பதற்கான அருளைத் தரவேண்டும்.</p><p align="JUSTIFY"><strong>தாம் மோகமுடன் ஊறு பால் தேடி… </strong>(கண்ணனாகிய) தான், ஆசையோடு, கறந்த பாலைத் தேடிக்கொண்டு,</p><p align="JUSTIFY"><strong>உரலோடு தான் ஏறி விளையாடும் ஒரு போதில்…</strong> உரல்மீதில் ஏறி விளையாடுகின்ற சமயத்தில்,</p><p align="JUSTIFY"><strong>தாயாக வரு (ய)சோதை காணாது களவாடு தாமோதரன் முராரி மருகோனே…</strong> தாய் யசோதைக்குத் தெரியாமல் (வெண்ணெய், பாலைத்) திருடும் தாம உதரனான (கயிற்றால் கட்டப்பட் வயிற்றை உடையவனான); முரன் என்ற அசுரனை வதைத்த திருமாலுடைய மருமகனே!</p><p align="JUSTIFY"><strong>மா மாது வன மாது கார் மேவும் சிலை மாது மாலாகி விளையாடும் புய வீரா…</strong> சிறந்த பெண்ணாகிய இலக்குமியைப் போன்ற வனமாதும்; மேகம் சூழ்ந்த மலைகளில் வாழ்பவளுமான வள்ளியின் மேல் மோகம் கொண்டு விளையாடுகின்ற பன்னிருதோள் வீரனே!</p><p align="JUSTIFY"><strong>வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும் மாயூர கிரி மேவும் பெருமாளே…</strong> தேவலோகத்தவரும் புகழ்வதான; தேனாறு என்னும் ஆற்றினால் சூழப்பட்ட மயூரகிரி எனப்படும் குன்றக்குடியில்* வீற்றிருக்கும் பெருமாளே.</p><p align="JUSTIFY">(<em>புகழ்பெற்ற வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த ஊரும் இதுவே; ஆகவே இது குன்னக்குடி என்றும் அறியப்படுகிறது</em>)</p><p align="JUSTIFY"><em>சுருக்க உரை</em></p><p align="JUSTIFY"><em>ஆசையோடு கறந்த பாலைத் தேடியபடி, தாய் யசோதைக்குத் தெரியாமல் உரல்மீது ஏறி விளையாடுகின்ற தாமோதரனும்; முரன் என்ற அசுரனை வதைத்தவனுமான திருமாலுடைய மருமகனே!  மேகங்கள் சூழ்ந்த வள்ளிமலைக் காட்டில் வளர்ந்த வள்ளியின்மேல் மோகம்கொண்ட பன்னிரு தோளனே!  தேவலோகத்தாரும் புகழ்வதானதும்; தேனாறு பாய்வதுமான குன்றக்குடியில் வீற்றிருக்கும் பெருமாளே!</em></p><p align="JUSTIFY"><em>(என் மோகத்தின் காரணமாக) என் உள்ளத்தில் நடுக்கம் ஏற்படுமாறு கூவுகின்ற குயிலாலும்; மன்மதனுடைய கூர்மையான அம்புளாலும்; அன்புபாராட்டும் பெண்கள் (என் நிலைமையைப் பார்த்துப்) பேசும் கேலிப் பேச்சுகளாலும்; புல்லாங்குழலின் இன்னிசை உண்டாக்கும் மோக லாகிரியாலும் ஏற்படும் மோக வலைக்குள் நான் அகப்பட்டு ஏமாந்துவிடாமல்; உன்னோடு சேர்ந்து கலந்திருக்கும் அழிவற்றதும் மேலானதுமான நிலையை நான் அடையுமாறு அருள்புரிவாயாக.</em></p><p> </p>

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.