பகுதி - 266
திருச்செந்தூர் தலத்துக்கான பாடலிது. அருணகிரியாருடன் எப்போதும் மோதிக்கொண்டிருந்த சம்பந்தாண்டான், தனக்குப் பலவிதமான பட்டப் பெயர்களைச் சூட்டிக்கொண்டு பல்லக்கில்
திருச்செந்தூர் தலத்துக்கான பாடலிது. அருணகிரியாருடன் எப்போதும் மோதிக்கொண்டிருந்த சம்பந்தாண்டான், தனக்குப் பலவிதமான பட்டப் பெயர்களைச் சூட்டிக்கொண்டு பல்லக்கில் பவனிவந்த சமயத்தில் அவனுடைய அகந்தை நீங்குமாறு இந்தப் பாடலைப் பாட, பல்லக்கு நொறுங்கியதாகச் சொல்வார்கள். திருமுருக கிருபானந்த வாரியார் இயற்றிய ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணம் என்ற நூலில் இப்படியொரு குறிப்பு இருக்கிறது. அப்படியும் சொல்லலாம். பொதுவாகவே தன்னுடைய அகந்தை அழியும்படிப் பாடியதாகவும் சொல்லலாம். உரையாசிரியர்கள் பின்னதைத்தான் பின்பற்றியிருக்கிறார்கள்.
இந்தப் பாடலில் திருமால், பரமசிவனிடமிருந்து சக்ராயுதத்தைப் பெற்ற வரலாறு சொல்லப்படுகிறது. மைசூரு, நஞ்சங்கூட்டில் உள்ள சிவாலயத்தில் இக்காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
தனதனன தான தான தந்தன
Advertisement
தனதனன தான தான தந்தன
தனதனன தான தான தந்தன தந்ததான
படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்
வியனினுரை பானு வாய்வி யந்துரை
பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி சங்கபாடல்
பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை
திருவளுவ தேவர் வாய்மை யென்கிற
பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் சந்தமாலை
மடல்பரணி கோவை யார்க லம்பக
முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்
வகைவகையி லாசு சேர்பெ ருங்கவி சண்டவாயு
மதுரகவி ராஜ னானென் வெண்குடை
விருதுகொடி தாள மேள தண்டிகை
வரிசையொ டுலாவு மால கந்தைத விர்ந்திடாதோ
அடல்பொருத பூச லேவி ளைந்திட
எதிர்பொரவொ ணாம லேக சங்கர
அரஹர சிவாம ஹாதெ வென்றுனி அன்றுசேவித்
தவனிவெகு கால மாய்வ ணங்கியு
ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம
அதிபெல கடோர மாச லந்த்ர னொந்துவீழ
உடல்தடியு மாழி தாவவெ னம்புய
மலர்கள் தச நூறு தாளி டும்பக
லொருமலரி லாது கோவ ணிந்திடு செங்கண்மாலுக்
குதவிய கேசர் பால இந்திரன்
மகளை மண மேவி வீறு செந்திலி
லுரியஅடி யேனை யாள வந்தருள் தம்பிரானே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/268248842&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>