ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "அவரது குரலின் வழியாக, அவரது கலை நம்மிடையே என்றும் அழியாமல் நிலைத்திருக்கும். இந்தத் துயரமான நேரத்தில், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்," இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92) உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று (ஏப்ரல் 12) காலமானார். பாடகி ஆஷா போஸ்லே 20-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். குறிப்பாக ஹிந்தியில் காலத்தால் அழியாத பல பாடல்களையும் அவர் பாடியுள்ளார்.
Advertisement
Advertisement
ஆஷா போஸ்லேவின் மறைவுச் செய்தியை அவரது மகன் ஆனந்த் போஸ்லே உறுதி செய்துள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை மாலை 4 மணிக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மாடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.