பகுதி - 272
இது சிதம்பரம் தலத்துக்கு உரிய பாடல். மனத்துக்கு புத்தி சொல்கிறது. குழந்தைக்குச் சொல்வதைப்போல, ‘இங்க பாரு, இங்க வா.. சொன்னா கேக்கணும் என
இது சிதம்பரம் தலத்துக்கு உரிய பாடல். மனத்துக்கு புத்தி சொல்கிறது. குழந்தைக்குச் சொல்வதைப்போல, ‘இங்க பாரு, இங்க வா.. சொன்னா கேக்கணும் என்ன? எதுக்கு யோசிக்கற’ என்று தொடங்கி, சங்கநிதி பதுமநிதியாகவும் கற்பகச் சோலையாகவும் இருக்கும் அவன் ஒருவனே பரம்பொருள்’ என்று தொடர்ந்து மனத்துக்கு உறுதியானவற்றை எடுத்துச் சொல்கிறது.
பாடலைக் குறித்த கருத்துவேறுபாடுகளால் இப்பாடல் சில பதிப்புகளில் இடம்பெறவில்லை. ஆனால் குகத்திரு தணிகைமணி செங்கல்வராய பிள்ளையவர்கள் இதைத் தன் பதிப்பிலே சேர்த்திருக்கிறார். (653-1 என்ற எண்ணுள்ளது).
தனனா தனத்ததன தனனா தனத்ததன
தனனா தனத்ததன தனதானா
மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில்
வருவா யுரைத்தமொழி தவறாதே
மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு
மனமாயை யற்றசுக மதிபாலன்
நினைவே துனக்கமரர் சிவலோக மிட்டுமல
நிலைவே ரறுக்கவல பிரகாசன்
நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம
நிழலாளி யைத்தொழுது வருவாயே
இனமோ தொருத்திருபி நலமேர் மறைக்கரிய
இளையோ ளொரொப்புமிலி நிருவாணி
எனையீ ணெடுத்தபுகழ் கலியாணி பக்கமுறை
யிதழ்வேணி யப்பனுடை குருநாதா
முனவோர் துதித்து மலர் மழைபோ லிறைத்துவர
முதுசூ ரரைத்தலை கொள் முருகோனே
மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு
முருகா தமிழ்ப்புலியுர் பெருமாளே.
Advertisement
</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/268847581&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>