முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 273

உரைத்த மொழி தவறாதே: நான் சொல்லும் வார்த்தையைத் தவறாது பின்பற்று;

Updated On : 13 ஜூன், 2016 at 2:49 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:00 PM

பதச் சேதம்

சொற் பொருள்

மனமே உனக்கு உறுதி புகல்வேன் எனக்கருகில் வருவாய் உரைத்த மொழி தவறாதே

Advertisement

 

உரைத்த மொழி தவறாதே: நான் சொல்லும் வார்த்தையைத் தவறாது பின்பற்று;

மயில் வாகனக் கடவுள் அடியார் தமக்கு அரசு மனமாயை அற்ற சுக மதிபாலன்

 

மனமாயை அற்ற: மன மயக்கம் இல்லாத; சுகமதி பாலன்: சுகசொரூபமான அறிவுள்ள சிறுவன்;

நினைவு ஏதுஉனக்கு அமரர் சிவலோகம் இட்டு மல நிலை வேரறுக்க வ(ல்)ல பிரகாசன்

 

நினைவு ஏது உனக்கு: என்ன யோசிக்கிறாய், ஏன் யோசிக்கிறாய்; மலநிலை: ஆணவ, கன்ம, மாயா மலங்களை; பிரகாசன்: ஒளிரூபன்;

நிதி கா நமக்குறுதி அவரே பரப்பிரம(ம்) நிழலாளி யைத்தொழுது வருவாயே

 

நிதி: சங்க, பதும நிதிகள்; கா: கற்பகக்கா—கற்பகச் சோலை; பரம்பிரமம்: முழுமுதல்; நிழலாளி: நீதிமான் (நிழல்: நீதி (பிங்கல நிகண்டு);

இனமோ தொருத்தி ருபி நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள் ஒர் ஒப்புமிலி நிருவாணி

 

இனம் ஓது ஒருத்தி: நமக்கு உறவென்று சொல்லக்கூடிய ஒருத்தி; ருபி: ரூபி, அழகான வடிவம் உள்ளவள்; ஏர்: அழகு; மறைக்கு அரிய: வேதங்களுக்கு எட்டாத; இளையோள்: என்றும் இளையவள், குமரி; நிருவாணி: திகம்பரி, திக்கையே ஆடையாகக் கொண்டவள்;

எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை இதழ்வேணி அப்பனுடை குருநாதா

 

ஈணெடுத்த: ஈன்றெடுத்த (விகாரம்—வடிவம் மாறிய சொல்); கலியாணி பக்கம் உறை: கல்யாணியின் வலதுபக்கத்தில் உறையும்; இதழ்: கொன்றை; வேணி: சடாபாரம்;

முனவோர் துதித்து மலர் மழைபோல் இறைத்து வர முது சூரரைத் தலைகொள் முருகோனே

 

முனவோர்: முன்னவர்களான அரி, அயன், ருத்திரன்; முதுசூரரை: தொன்மையான சூரபத்மன் ஆதியர்களை; தலைகொள்: தலையைக் கொய்யும்;

மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்கு உருகு  முருகா தமிழ்ப்புலியுர் பெருமாளே.

 

மொழிபாகு: தேன் பாகைப் போன்ற சொல்; மயிலாள்: வள்ளி; புலியுர்: புலியூர் (குறுக்கல் விகாரம்), சிதம்பரம்;

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/268847581&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"><strong>மனமே உனக்கு உறுதி புகல்வேன்</strong> ... மனமே, நீ உறுதி அடைவதற்கான நல்லனவற்றைச் சொல்வேன்;</p><p align="justify"><strong>எனக்கு அருகில் வருவாய் உரைத்தமொழி தவறாதே</strong> ... இப்படிச் சற்று அருகில் வா (உட்கார்); நான் சொல்லும் சொற்களைக் கேட்டு அவற்றைத் தவறாமல் கடைப்பிடி;</p><p align="justify"><strong>மயில் வாகனக்கடவுள் அடியார் தமக்கரசு</strong> ... மயிலை வாகனமாகக் கொண்ட கடவுளும்; அடியவர்களின் அரசனும்;</p><p align="justify"><strong>மனமாயை யற்ற சுக மதிபாலன்</strong> ... மனம் மாயை என்ற அனைத்தையும் கடந்தவனும், சுக ஸ்வரூபமான மதியையும் உடைய பாலனும்; <em>(இதை ‘நிதிகா நமக்குறுதி’ என்பதோடு கொண்டுகூட்டிக் கொள்ளவேண்டும்.  இதற்கடுத்து வருவது ‘பக்கத்தில் உட்கார்’ என்று சொன்ன மனத்தோடு பேசுவது)</em></p><p align="justify"><strong>நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு</strong> ... என்ன யோசிக்கிறாய், எதற்கு யோசிக்கிறாய்? தேவலோகத்தையும் சிவலோகத்தையும் நமக்குத் தந்து,</p><p align="justify"><strong>மல நிலை வேர் அறுக்கவல பிரகாசன்</strong> ... நம்முடைய ஆணவ, கன்ம, மாயா மலங்களை வேரோடு அறுத்தெடுக்க வல்லவனும் ஜோதிஸ்வரூபனும்;</p><p align="justify"><strong>நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம</strong> ... சங்கநிதியும், பதுமநிதியும், கற்பகச் சோலையும் ஆனவனுமான அவனே நமக்கு உறுதி.  (ஏனெனில் அவனே முழுமுதல்.</p><p align="justify"><strong>நிழல் ஆளியைத் தொழுது வருவாயே</strong> ... (இத்தகைய) நீதிமானை என்றென்றும் விடாமல் தொழுவாயாக.</p><p align="justify"><strong>இனம் ஓது ஒருத்தி ருபி</strong> ... நமக்கு உண்மையான உறவு என்று சொல்லக்கூடிய ஒரேயொருத்தியும்; பேரழகு நிறைந்தவளும்;</p><p align="justify"><strong>நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள்</strong> ... நலமும் அழகும் திகழ்பவளும்; வேதங்களுக்கும் எட்டாதவளும்; என்றும் இளையவளான குமரியும்;</p><p align="justify"><strong>ஒர் ஒப்புமிலி நிருவாணி</strong> ... தனக்கு ஒப்பு என்று எதுவும் யாரும் அற்றவளும், உடையற்ற திகம்பரியும்;</p><p align="justify"><strong>எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை</strong> ... என்னை ஈன்றெடுத்தவளுமான கல்யாணியின் வலது பக்கத்தில் இருப்பவரும்,</p><p align="justify"> </p><p align="justify"><em>(‘சிவனுடைய இடப்பாகத்தில் உறைபவள்’ என்று சொல்லப்படுவதற்கு மாறாக, ‘தேவியுடைய வலப்பாகத்தில் உறைபவன்’ என்று சொல்வது அருணகிரியாருக்கு வழக்கமே. </em></p><p align="justify"><em>மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றுவன்வந் தாலென்முன்னே</em></p><p align="justify"><em>தோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்சுத்த நித்தமுத்தித்</em></p><p align="justify"><em>த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் <u>த்ரியாம்பகனைப்</u></em></p><p align="justify"><u><em>பாகத்தில் வைக்கும் பரம கல்யாணி</em></u><em>தன் பாலகனே—என்று கந்தர் அலங்காரத்தில் சொல்வதைக் காண்க.)</em></p><p align="justify"><strong>இதழ்வேணியப்பனுடை குருநாதா</strong> ... கொன்றையைச் சூடிய சடாமுடியை உடையவருமான சிவபெருமானுடைய குருநாதனே!</p><p align="justify"><strong>முனவோர் துதித்து மலர் மழைபோல் இறைத்துவர</strong> ... முன்னவர்களாகிய அரி, பிரமன், ருத்திரன் ஆகியோர் துதித்தபடியும் மலர்மாரியைப் பொழிந்தபடியும் வர,</p><p align="justify"><strong>முது சூரரைத் தலை கொள் முருகோனே</strong> ... தொன்மையானவர்களான சூரபத்மனாதியருடைய தலையைக் கொய்யும் முருகனே!</p><p align="justify"><strong>மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்கு</strong> ... தேன்பாகு போன்ற இனிதாகப் பேசுபவளும், முத்துப் போன்ற பற்களை உடையவளுமான வள்ளியை நினைத்து</p><p align="justify"><strong>உருகு முருகா தமிழ்ப்புலியுர் பெருமாளே.</strong> ... மனம் உருகும் முருகா, தமிழ் மணம் கமழ்வதான புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.</p><p align="justify"> </p><p align="justify"><strong><em>சுருக்க உரை:</em></strong></p><p align="justify"><em>மனமே!  இப்படிவா.  அருகில் உட்கார்.  நான் சொல்வதைக் கேட்டு நட. </em></p><p align="justify"><em>நமக்கு உண்மையான உறவு என்று சொல்லத்தக்கவளும்; ஒப்பற்றவளும்; பேரழகியும்; வேதங்களுக்கும் எட்டாதவளும்; இளையவளும்; திகம்பரியும்; என்னைப் பெற்றெடுத்தவளுமான கலியாணியம்மையின்</em></p><p align="justify"><em>வலதுபாகத்திலே உறைகின்றரும்; கொன்றையைச் சூடிய சடாமுடியை உடையவருமான சிவபெருமானின் குருமூர்த்தி; யாருக்கும் தலைவர்களான அரியும் பிரமனும் ருத்திரனும் மலர்மாரியைப் பொழிந்தபடித் துதிக்க பழைமை வாய்ந்த சூரபத்மனாதியருடைய தலையைக் கொய்த முருகனை; மயில்வாகனம் ஏறும் தெய்வத்தை; அடியவர்களுக்கெல்லாம் அரசனை; மனத்தையும் அதைக் கட்டக்கூடிய மாயையும் கடந்தவனை; தேவலோகத்தையும் சிவலோகத்தையும் நமக்குத் தருபவனை; நம்முடைய ஆணவ, கன்ம, மாயா மலங்களை வேரறுக்க வல்லவனை நமக்கு சங்கநிதி, பதுமநிதியைப் போலவும், கற்பகச் சோலையைப் போலவும் நினைத்ததையெல்லாம் தரவல்ல முழுமுதற் கடவுளை; நீதிமானைத் தவறாது வழிபட்டு வா.  இதுவே உனக்கு உறுதி.  இதற்கேன் யோசிக்கிறாய்?</em></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.