பகுதி - 424
பாடல்பெற்ற தலமான பெரும்புலியூருக்கான பாடலிது.
திருஞான சம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல்பெற்ற தலமான பெரும்புலியூருக்கான பாடலிது. ‘திருவடிகளைத் தந்தருள வேண்டும்’ என்று கோருகிறது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகள்; 1, 3, 5 ஆகிய சீர்களின் மூன்றாம் எழுத்து மெல்லொற்று; 2, 4, 6 ஆகிய சீர்களின் முதலெழுத்து நெடில்; மூன்றாமெழுத்து வல்லொற்று என்று வல்லொற்றும் மெல்லொற்றும் கலந்த சந்தம்.
தனந்ததன தானத் தனந்ததன தானத்
தனந்ததன தானத் தனதான
Advertisement
சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச்
சரங்களொளி வீசப் புயமீதே
தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற்
சரங்கண்மறி காதிற் குழையாட
இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற்
றிரம்பையழ கார்மைக் - குழலாரோ
டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற்
றிரங்கியிரு தாளைத் - தருவாயே
சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச்
சிறந்தமயில் மேலுற் - றிடுவோனே
சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச்
சினந்தசுரர் வேரைக் - களைவோனே
பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப்
ப்ரசண்டஅபி ராமிக் - கொருபாலா
பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப்
பெரும்புலியுர் வாழ்பொற் - பெருமாளே.