பகுதி - 396
‘கண் பார்த்து அருளவேண்டும்’
பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இன்றைய பாடல், இறைவனைக் ‘கண் பார்த்து அருளவேண்டும்’ என்று வேண்டுகிறது.
அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகள்; தொங்கல்சீர் நீங்கலாக அத்தனை எழுத்துகளும் குறில். ஆங்காங்கே பயிலும் மிகச்சில இடையொற்று மெல்லொற்றுகளைத் தவிர்த்து வேறெங்கும் ஒற்று பயிலவில்லை. பாடலைப் பார்ப்போம்.
தனனதன தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதன தனதான
Advertisement
வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென
வயிரமர கதமகர மளவாக
வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழி
வளையிளைஞ ருயிர்கவர வருமாய
இதையமள விடஅரிய அரிவையர்கள் நெறியொழுகி
எழுபிறவி நெறியொழிய வழிகாணா
இடர்கள்படு குருடனெனை அடிமைகொள மகிழ்வொடுன
திருநயன கருணைசிறி தருள்வாயே
பதயுகள மலர்தொழுது பழுதில்பொரி அவல்துவரை
பயறுபெரு வயிறுநிறை யவிடாமுப்
பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசை
பரியதனி யெயிறுகொடு குருநாடர்
கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி றிடநெடிய
கடலுலகு நொடியில்வரு மதிவேகக்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத பெருமாளே.