முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 708

காலன் எதிர்ப்படும்போது தாளைத் தொழும்

Updated On : 7 டிசம்பர், 2017 at 10:09 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:47 PM

காலன் எதிர்ப்படும்போது தாளைத் தொழும் நினைவு வேண்டும் என்று கோரும் இப்பாடல் திருவானைக்காவுக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் நான்கெழுத்துகளையும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் ஒரு நெடிலும் ஒரு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் கொண்டு அமைந்தவை.


தானதன தானத் தானதன தானத்
      தானதன தானத்                    தனதான

Advertisement

ஆரமணி வாரைப் பீறியற மேலிட்
         டாடவர்கள் வாடத்               துறவோரை

ஆசைமட லூர்வித் தாளுமதி பாரப்
         பாளித படீரத்                    தனமானார்

காரளக நீழற் காதளவு மோடிக்
         காதுமபி ராமக்                   கயல்போலக்

காலனுடல் போடத் தேடிவரு நாளிற்
         காலைமற வாமற்                புகல்வேனோ

பாரடைய வாழ்வித் தாரபதி பாசச்
         சாமளக லாபப்                   பரியேறிப்

பாய்மதக போலத் தானொடிக லாமுற்
         பாடிவரு மேழைச்                சிறியோனே

சூரர்புர சூறைக் காரசுரர் காவற்
         காரஇள வேனற்                  புனமேவுந்

தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்
         சோதிவளர் காவைப்              பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.