முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 710

உன் கழலை நினைக்கும் பேற்றை

Updated On : 9 டிசம்பர், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:48 PM

‘உன் கழலை நினைக்கும் பேற்றைத் தரவேண்டும்’ என்று வேண்டுகிற இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் நான்கு குற்றெழுத்துகளையும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றையும் கொண்டு அமைந்திருக்கின்றன.


தனதன தனதந் தனதன தனதந்
      தனதன தனதந்                     தனதான

Advertisement

இரவியு மதியுந் தெரிவுற எழுமம்
         புவிதனி லினமொன்             றிடுமாதும்

எழில்புதல் வருநின் றழுதுள முருகும்
         மிடர்கொடு நடலம்               பலகூறக்

கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்
         டுயிரினை நமனுங்               கருதாமுன்

கலைகொடு பலதுன் பமுமக லிடநின்
         கழலிணை கருதும்               படிபாராய்

திருமரு வியதிண் புயனயன் விரியெண்
         டிசைகிடு கிடவந்                 திடுசூரன்

திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ்
         சிடவலி யொடுகன்               றிடும்வேலா

அருமறை யவரந் தரமுறை பவரன்
         புடையவ ருயஅன்               றறமேவும்

அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
         கருணையி லுறையும்            பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.