பகுதி - 714
திருவடிகளின் நிழலிலே புகுந்திருக்க வேண்டும்
‘உன்னுடைய திருவடிகளின் நிழலிலே புகுந்திருக்க வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஐந்து குற்றெழுத்துகளையும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு முடியும் மூன்றெழுத்துகளையும் கொண்டவை.
தனதன தனனா தனதன தனதனா
தனதன தனனா தனதான
Advertisement
கெஜநடை மடவார் வசமதி லுருகா
கிலெசம துறுபாழ் வினையாலே
கெதிபெற நினையா துதிதனை யறியா
கெடுசுக மதிலாழ் மதியாலே
தசையது மருவீ வசையுட லுடனே
தரணியில் மிகவே யுலைவேனோ
சததள மலர்வார் புணைநின கழலார்
தருநிழல் புகவே தருவாயே
திசைமுக வனைநீள் சிறையுற விடுவாய்
திருநெடு கருமால் மருகோனே
திரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார்
திரிபுரை யருள்சீர் முருகோனே
நிசிசர ருறைமா கிரியிரு பிளவா
நிறையயில் முடுகா விடுவோனே
நிலமிசை புகழார் தலமெனு மருணா
நெடுமதில் வடசார் பெருமாளே.