முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 470

தேவனூர் என்னும் தலத்துக்கானது. 

Updated On : 7 பிப்ரவரி, 2017 at 1:27 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:23 PM

பரம்பொருளின் தன்மையைச் சொல்லும் இந்தப் பாடல் செஞ்சிக்கு அருகேயுள்ள தேவனூர் என்னும் தலத்துக்கானது. 

அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒவ்வொரு முதற் சீரும் இரண்டாம் சீரும் நெடிலோடு தொடங்குகின்றன.  ஒவ்வொரு மூன்றாம் சீரிலும் மூன்றாம் எழுத்து நெடில்.

தான தானன தனனா தனதன
      தான தானன தனனா தனதன
         தான தானன தனனா தனதன          தந்ததான

காணொ ணாதது உருவோ டருவது
         பேசொ ணாதது உரையே தருவது
         காணு நான்மறை முடிவாய் நிறைவது  பஞ்சபூதக்
      காய பாசம தனிலே யுறைவது
         மாய மாயுட லறிவா வகையது
         காய மானவ ரெதிரே யவரென         வந்துபேசிப்
பேணொ ணாதது வெளியே யொளியது
         மாய னாரய னறியா வகையது
         பேத பேதமொ டுலகாய் வளர்வது      விந்துநாதப்
     பேரு மாய்கலை யறிவாய் துரியவ
         தீத மானது வினையேன் முடிதவ
         பேறு மாயருள் நிறைவாய் விளைவது  ஒன்றுநீயே
வீணொ ணாதென அமையா தசுரரை
         நூறி யேயுயிர் நமனீ கொளுவென
          வேல்க டாவிய கரனே யுமைமுலை   யுண்டகோவே
      வேத நான்முக மறையோ னொடும்விளை
         யாடி யேகுடு மியிலே கரமொடு
         வீற மோதின மறவா குறவர்கு         றிஞ்சியுடே
சேணொ ணாயிடு மிதண்மே லரிவையை
         மேவி யேமயல் கொளலீ லைகள்செய்து
         சேர நாடிய திருடா வருடரு            கந்தவேளே
      சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ்
         ஞான யோகிக ளுளமே யுறைதரு
         தேவ னூர்வரு குமரா வமரர்கள்        தம்பிரானே.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.