முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 464

இப்பாடல் திருச்செந்தில் தலத்துக்கானது. 

Updated On : 28 ஜனவரி, 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:19 PM

இந்த எளிய சந்த அமைப்பைக் கொண்ட பாடல் திருச்செந்தில் தலத்துக்கானது.  ‘உன்னை என்னுளே அறிவதற்கான அன்பைத் தந்தருள்வாயாக’ என்று இறைவனை வேண்டும் பாடல்.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளை உடைய பாடல்;  தொங்கல் சீரில் பயிலும் நெடிலை ஒழித்து வேறெங்கும் நெடில் பயிலாமல் எல்லா எழுத்துகளும் குறிலாகவே உள்ள சந்தம்.  ஒவ்வொரு மூன்றாம் சீரிலும் இரண்டாம் எழுத்து மெல்லொற்று, நான்காம் எழுத்து வல்லொற்று.  இந்த வல்லொற்று, தாளத்துக்குத் திருப்புமுனையாக அமைவதைக் காணலாம். பெரும்பாலும் இடையினமும் மெல்லினமும் கலந்த நடை.

தனனதன தனன தந்தத்                   தனதானா
      தனனதன தனன தந்தத்             தனதானா

Advertisement

இயலிசையி லுசித வஞ்சிக்                கயர்வாகி
      இரவுபகல் மனது சிந்தித்            துழலாதே
உயர்கருணை புரியு மின்பக்                கடல்மூழ்கி
      உனையெனது ளறியு மன்பைத்      தருவாயே
மயில் தகர்க லிடைய ரந்தத்              தினைகாவல்
      வனசகுற மகளை வந்தித்           தணைவோனே
கயிலை மலை யனைய செந்திற்          பதிவாழ்வே
      கரிமுகவ னிளைய கந்தப்            பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.