பகுதி - 596
தந்தருள வேண்டும்
‘உன்னுடைய திருவடியைத் தந்தருள வேண்டும்’ என்று கேட்கின்ற இந்தப் பாடல் எட்டிக்குடிக்கானது.
தொங்கல் சீர் நீங்கலாக, எல்லாச் சீர்களுமே நேர்நிரைநேர் என்ற புளிமாங்காய் வாய்பாட்டு அமைப்பை உடையதும் முற்றிலுமே வல்லொற்றுகளால் ஆனதுமான பாடல். அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகள் உள்ளன. எல்லாச் சீர்களிலுமே நான்கு நான்கு குற்றெழுத்துகள் உள்ளன. இவற்றில் நான்காவதாக இடம்பெறும் வல்லொற்று கணக்கில் சேராதது.
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
தனதத்த தனதத்த தனதான
Advertisement
கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த
கயலொத்த மலரொத்த விழிமானார்
கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு
கதிர்முத்து முலைதைக்க அகலாதே
மிடலுற்ற கலவிக்கு ளுளநச்சி வளமற்று
மிடிபட்டு மடிபட்டு மனமாழ்கி
மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை
மிகநட்பொ டருள்தற்கு வருவாயே
தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
தலைபத்து டையதுட்ட னுயிர்போகச்
சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி
தருசக்ர தரனுக்கு மருகோனே
திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த
சிவனுக்கு விழியொத்த புதல்வோனே
செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற
திகழெட்டி குடியுற்ற பெருமாளே.