முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 596

தந்தருள வேண்டும்

Updated On : 1 ஜூலை, 2017 at 11:36 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 9:50 PM

‘உன்னுடைய திருவடியைத் தந்தருள வேண்டும்’ என்று கேட்கின்ற இந்தப் பாடல் எட்டிக்குடிக்கானது.

தொங்கல் சீர் நீங்கலாக, எல்லாச் சீர்களுமே நேர்நிரைநேர் என்ற புளிமாங்காய் வாய்பாட்டு அமைப்பை உடையதும் முற்றிலுமே வல்லொற்றுகளால் ஆனதுமான பாடல். அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகள் உள்ளன. எல்லாச் சீர்களிலுமே நான்கு நான்கு குற்றெழுத்துகள் உள்ளன.  இவற்றில் நான்காவதாக இடம்பெறும் வல்லொற்று கணக்கில் சேராதது.


தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
                  தனதத்த தனதத்த   தனதான

Advertisement

கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த
                  கயலொத்த மலரொத்த விழிமானார்

 கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு
                 கதிர்முத்து முலைதைக்க  அகலாதே

மிடலுற்ற கலவிக்கு ளுளநச்சி வளமற்று
                மிடிபட்டு மடிபட்டு  மனமாழ்கி

மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை
                மிகநட்பொ டருள்தற்கு   வருவாயே

தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
               தலைபத்து டையதுட்ட    னுயிர்போகச்

சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி
              தருசக்ர தரனுக்கு    மருகோனே

திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த
             சிவனுக்கு விழியொத்த   புதல்வோனே

செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற
             திகழெட்டி குடியுற்ற    பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.