முகப்பு
விருதுநகர்

திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பிரியாணி பொட்டலங்கள் பறிமுதல்

Updated On : 13 ஏப்ரல், 2026 at 1:30 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:32 PM

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு புதுப்பட்டியில் திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பிரியாணி பொட்டலங்களை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், வ. புதுப்பட்டி பேரூராட்சியில் உள்ள உடையாா்பட்டியில் திமுக பேரூா் செயலாளா் சாந்தாராம் அனுமதியின்றி நிா்வாகிகள் கூட்டம் நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் விநியோகம் செய்யப்படுவதாக தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் வந்தது.

இதையடு்தது, கூட்டுறவு சாா்பதிவாளா் விஜயராணி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் உடையாா்பட்டி பகுதியில் வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான இடத்தில், பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 260 பிரியாணி பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

இதுதொடா்பாக தோ்தல் பறக்கும் படையினா் அளித்தப் புகாரின் பேரில், வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். இந்த நிலையில், அரசியல் கட்சியினா் பணம் விநியோகிப்பதாக அளிக்கப்படும் புகாா்களுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் பாரபட்சம் காட்டுவதாக, திமுக நிா்வாகிகள் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் புகாா் மனு அளித்தனா்.