முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 698

உன்னுடைய திருவடியை மறவாதிருக்க வேண்டும்

Updated On : 21 நவம்பர், 2017 at 8:53 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:40 PM

‘உன்னுடைய திருவடியை மறவாதிருக்க வேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருச்செங்கோட்டுக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 19 எழுத்துகளைக் கொண்ட பாடல். மெல்லொற்றுகளால் நிறைந்த இப்பாடலில் ஒருசில இடையின ஒற்றுகளும் பயில்கின்றன.  வல்லொற்று எதுவும் இல்லை.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் குறில்-நெடில்-குறில் என மூன்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் பயில்கின்றன.


தந்தான தந்த தந்தான தந்த
      தந்தான தந்த தனதான

Advertisement

வண்டார் மதங்க ளுண்டே மயங்கி
         வந்தூரு கொண்ட லதனோடும்

வண்காம னம்பு தன்கால் மடங்க
         வன்போர் மலைந்த விழிவேலும்

கொண்டேவ ளைந்து கண்டார் தியங்க
         நின்றார் குரும்பை               முலைமேவிக்

கொந்தா ரரும்பு நின்தாள் மறந்து
         குன்றாம லுன்ற  னருள்தாராய்

பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு
         பண்போனு கந்த மருகோனே

பண்சார நைந்து நண்போது மன்பர்
         பங்காகி நின்ற குமரேசா

செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில்
         நின்றாடி சிந்தை மகிழ்வாழ்வே

செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்ற
         செங்கோட மர்ந்த பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.