முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 806

உன் மார்பிலே அணிந்திருக்கும்...

Updated On : 24 ஏப்ரல், 2018 at 11:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:20 PM

 

‘உன் மார்பிலே அணிந்திருக்கும் மாலையைத் தந்தருள்வாயாக’ என்று இறைவனை நாயகி பாவத்திலே வேண்டும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.  பொதுவாக குருநாதரின் அகத்துறைப் பாடல்களில் பெரும்பான்மையும் ‘நற்றாயிரங்கல்’ துறையில், ‘உன்மீது மோகம் கொண்ட என் மகளை ஆண்டருள்வாயாக’ என்று கேட்பதாக அமைந்திருக்கும்.  இந்தப் பாடல், தன்னையே நாயகியாகப் பாவித்து, ‘உன் மார்பிலே அணியும் மாலையைத் தந்தருள்வாயக’ என்று கேட்கும் அரிய வகையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என மூன்றெழுத்துகளும்;  இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று, ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

Advertisement

தானந்த தானத்தந்                         தனதானா

 

நீலங்கொள் மேகத்தின்                    மயில்மீதே

         நீவந்த வாழ்வைக்கண்            டதனாலே 

மால்கொண்ட பேதைக்குன்                மணநாறும் 

         மார்தங்கு தாரைத்தந்             தருள்வாயே  

வேல்கொண்டு வேலைப்பண்              டெறிவோனே 

         வீரங்கொள் சூரர்க்குங்            குலகாலா 

நாலந்த வேதத்தின்                        பொருளோனே 

         நானென்று மார்தட்டும்           பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.