முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 808

என்னைத் தழுவியருள...

Updated On : 26 ஏப்ரல், 2018 at 11:02 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:21 PM

 

‘என்னைத் தழுவியருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் நாயகி பாவத்தில் இயற்றப்பட்டது. பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) இடையின மெய்யும்; இரண்டாம் சீரிலும் நான்காம் சீரிலும் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்திருக்கின்றன.

Advertisement

தய்யதன தானத்                          தனதானா

துள்ளுமத வேள்கைக்                     கணையாலே

         தொல்லைநெடு நீலக்             கடலாலே   

மெள்ளவரு சோலைக்                     குயிலாலே   

         மெய்யுருகு மானைத்             தழுவாயே   

தெள்ளுதமிழ் பாடத்                       தெளிவோனே       

         செய்யகும ரேசத்                 திறலோனே   

வள்ளல்தொழு ஞானக்                    கழலோனே       

         வள்ளிமண வாளப்               பெருமாளே.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.