பகுதி - 810
‘யான், எனது’ என்ற..
‘யான், எனது’ என்ற மயக்கம் அறவேண்டும் என்ற கோரும் இப்பாடல், பொதுப்பாடல்களின் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்ட பாடல். தொங்கல் சீரை விட்டுவிட்டால் அடிக்கு இரண்டே இரண்டு சீர்களைக் கொண்ட பாடல். தொங்கல் சீரையும் சேர்த்துக் கணக்கிட்டால் அடிக்கு ஐந்து சீர்கள் என்று கொள்ளவேண்டும். ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன. தொங்கல் சீரில் வழக்கம்போல மூன்றாவது எழுத்து நெடிலாகவும் மற்ற மூன்றும் குறிலாகவும் வரும் நான்கெழுத்துகள் அமைந்திருக்கின்றன.
தான தனத் தனதான
Advertisement
தேனி யல்சொற் கணிமாதர்
சேவை தனைக் கருதாதே
யானெ னதற்றிடுபோதம்
யான றிதற் கருள்வாயே
வான வருக் கரசான
வாச வனுக் கினியோனே
ஆனை முகற் கிளையோனே
ஆறு முகப் பெருமாளே.