முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 810

‘யான், எனது’ என்ற..

Updated On : 28 ஏப்ரல், 2018 at 2:36 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:22 PM

‘யான், எனது’ என்ற மயக்கம் அறவேண்டும் என்ற கோரும் இப்பாடல், பொதுப்பாடல்களின் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  தொங்கல் சீரை விட்டுவிட்டால் அடிக்கு இரண்டே இரண்டு சீர்களைக் கொண்ட பாடல்.  தொங்கல் சீரையும் சேர்த்துக் கணக்கிட்டால் அடிக்கு ஐந்து சீர்கள் என்று கொள்ளவேண்டும்.  ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.  தொங்கல் சீரில் வழக்கம்போல மூன்றாவது எழுத்து நெடிலாகவும் மற்ற மூன்றும் குறிலாகவும் வரும் நான்கெழுத்துகள் அமைந்திருக்கின்றன.

தான தனத்          தனதான

Advertisement

தேனி யல்சொற்            கணிமாதர்

                        சேவை தனைக்        கருதாதே

யானெ னதற்றிடுபோதம்

                        யான றிதற்           கருள்வாயே

வான வருக்                கரசான

                        வாச வனுக்        கினியோனே

ஆனை முகற்        கிளையோனே

                        ஆறு முகப்        பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.