முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 811

தேன் இயல் சொற்கு..

Updated On : 28 ஏப்ரல், 2018 at 2:54 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:22 PM

பதச் சேதம்

சொற் பொருள்

தேன் இயல் சொற்குஅணி மாதர்

Advertisement

 

தேன் இயல்: தேனின் தன்மையை; சொற்கு அணிமாதர்: சொல்லில் அணிந்திருக்கின்ற பெண்களுக்கு;

சேவை தனைகருதாதே

 

 

யான் எனது அற்றிடுபோதம்

 

போதம்: ஞானம்;

யான் அறிதற்குஅருள்வாயே

 

 

வானவருக்கு அரசான

 

 

வாசவனுக்குஇனியோனே

 

வாசவன்: இந்திரன்;

ஆனை முகற்குஇளையோனே 

 

 

ஆறு முக பெருமாளே.

 

 

தேன் இயல் சொற்கு அணி மாதர் சேவை தனைக் கருதாதே... தங்களுடைய பேச்சிலே தேனின் இனிமையைக் கொண்டிருக்கின்ற பெண்களுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருப்பதை எண்ணத்தில் கொள்ளாமல்,

யான் எனது அற்றிடு போதம் யான் அறிதற்கு அருள்வாயே... யான், எனது (எனப்படும் அகங்காரமும் மமகாரமும்) என்னைவிட்டு நீங்குவதற்கான ஞானத்தை நான் உணரும்படியாக அருளவேண்டும்.

வானவருக்கு அரசான வாசவனுக்கு இனியோனே... தேவர்களின் அரசனான இந்திரனுக்கு இனியவனே!

ஆனை முகற்கு இளையோனே ஆறு முகப் பெருமாளே.... ஆனை முகனின் இளையவனே!  ஆறுமுகங்களைக் கொண்ட பெருமாளே!

சுருக்க உரை

தேவர்களுக்கு அரசனான இந்திரனுக்கு இனியவனே! யானைமுகனுக்கு இளையவனே!  ஆறுமுகங்களைக் கொண்ட பெருமாளே!

தேனின் இனிய சுவையைத் தங்களுடைய பேச்சிலே கொண்டிருக்கும் பெண்களுக்குப் பணிவிடை செய்துகொண்டிருப்பதை நான் நினையாமல், ‘நான், எனது’ என்னும் கட்டுகளை அறுப்பதற்கான ஞானத்தை உணருமாறு அருளவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.