முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 884

எப்போதும் உனது திருவடிகளை..

Updated On : 5 ஆகஸ்ட், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:55 PM

 

‘எப்போதும் உனது திருவடிகளை ஓதவேண்டும்’ என்று கோரும் இப் பாடல் திருத்தணிக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் என இரண்டெழுத்துகளுமாக அமைந்துள்ளன.

Advertisement

தனத்தன தானந் தனத்தன தானந்

      தனத்தன தானந்                    தனதான

 

வினைக்கின மாகுந் தனத்தினர் வேளம்

         பினுக்கெதி ராகும்                விழிமாதர்

      மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்

         சமத்திடை போய்வெந்            துயர்மூழ்கிக்

கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்

         கருக்குழி தோறுங்                கவிழாதே

      கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்

         கழற்புக ழோதுங்                 கலைதாராய்

புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்

         சியைப்புணர் வாகம்              புயவேளே

      பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்

         பொருக்கெழ வானும்             புகைமீளச்

சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்

         திறக்கம ராடுந்                   திறல்வேலா

      திருப்புகழ ழோதுங் கருத்தினர் சேருந்

         திருத்தணி மேவும்               பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.