முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 886

சிவரூபத்தை அடைகின்ற உபாயத்தைச்..

Updated On : 6 ஆகஸ்ட், 2018 at 5:04 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:56 PM

‘சிவரூபத்தை அடைகின்ற உபாயத்தைச் சொல்லியருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருத்தணிகைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில் என இரண்டெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் இரண்டு நெடில், ஒரு குறில் என்று மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனன தான தானான தனன தான தானான

Advertisement

      தனன தான தானான                தனதான

உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத

         உணர்வி னூடு வானூடு          முதுதீயூ

      டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு

         மொருவ ரோடு மேவாத         தனிஞானச்

சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு

         துரிய வாகு லாதீத               சிவரூபம்

      தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை

         தொடுமு பாய மேதோசொ       லருள்வாயே

மடல றாத வாரீச அடவி சாடி மாறான

         வரிவ ரால்கு வால்சாய          அமராடி

      மதகு தாவி மீதோடி யுழல ரால டாதோடி

         மடையை மோதி யாறூடு        தடமாகக்

கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு

         கமல வாவி மேல்வீழு           மலர்வாவிக்

      கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர

         கருணை மேரு வேதேவர்        பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.