முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 888

பொதுமகளிரால் வருகின்ற துன்பம்..

Updated On : 9 ஆகஸ்ட், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:57 PM

பொதுமகளிரால் வருகின்ற துன்பம் நீங்கவேண்டும் என்று கோரும் இப்பாடல் திருப்பரங்குன்றுக்குரியது.

அடிக்கு ஒற்றொழித்து 46 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் மூன்று குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என மூனறெழுத்துகளும்; மூன்று-நான்கு, ஏழு-எட்டு, பதினொன்று-பன்னிரண்டு ஆகிய சீர்களில் நான்கு நான்கு குற்றெழுத்துகளுமாக அமைந்துள்ளன,

தனத்த தந்தன தனதன தனதன

Advertisement

      தனத்த தந்தன தனதன தனதன

      தனத்த தந்தன தனதன தனதன                  தனதான

கறுக்கு மஞ்சன விழியிணை அயில்கொடு

         நெருக்கி நெஞ்சற எறிதர பொழுதொரு

         கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு      நகையாலே

      களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ

         மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்

         கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு    கொடுபோகி

நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற

         அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர

         நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு             மிடறூடே

      நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென

         இசைத்து நன்கொடு மனமது மறுகிட

         நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற              அருள்வாயே

நிரைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென

         உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென

         நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென         வரைபோலும்

      நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு

         சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு

         நிணக்கொ ழம்பொடு குருதிகள் சொரிதர      அடுதீரா

திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு

         புழைக்கை தண்கட கயமுக மிகவுள

         சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரு         மிளையோனே

      சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய

         பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு

         திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண            பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.