முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 746

என்னிடத்திலுள்ள தீமைகள் அறுவதற்கு

Updated On : 25 ஜனவரி, 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:34 PM

‘என்னிடத்திலுள்ள தீமைகள் அறுவதற்கு, ‘அஞ்சேல்’ என்று அருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருச்செங்கோட்டுக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  எல்லாச் சீர்களிலும் ஒன்றேபோல மூன்று மூன்று எழுத்துகளே அமைந்திருந்தாலும் இவை அமைப்பில் மாறுபட்டவை.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் ஒரு மெல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாக மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.


தனத்தந் தானன தனத்தந் தானன
      தனத்தந் தானன                    தனதான

Advertisement

கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
         கருப்பஞ் சாறெனு                மொழியாலே

கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்
         கடைக்கண் பார்வையி            லழியாதே

விலக்கும் போதக மெனக்கென் றேபெற
         விருப்பஞ் சாலவு                 முடையேனான்

வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
         விடற்கஞ் சேலென               அருள்வாயே

அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
         அறுக்குங் கூரிய                 வடிவேலா

அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
         யடுக்கும் போதக                 முடையோராம்

சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
         திருச்செங் கோபுர                வயலூரா

திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய
         திருச்செங் கோடுறை             பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.