முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 870

அடியேன் முன்..

Updated On : 17 ஜூலை, 2018 at 3:08 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:45 PM

‘அடியேன் முன் நடனம் புரிந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தந்த தனதன தந்த

Advertisement

      தனதன தந்த                        தனதான

இருவினை யஞ்ச மலவகை மங்க

         இருள்பிணி மங்க                மயிலேறி

      இனவரு ளன்பு மொழியக டம்பு

         வினதக முங்கொ                டளிபாடக்

கரிமுக னெம்பி முருகனெ னண்டர்

         களிமலர் சிந்த                   அடியேன்முன்

      கருணைபொ ழிந்து முகமும லர்ந்து

         கடுகி நடங்கொ                  டருள்வாயே

திரிபுர மங்கை மதனுடல் மங்க

         திகழ்நகை கொண்ட              விடையேறிச்

      சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு

         திகழந டஞ்செய்                  தெமையீண

அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை

         அமலன்ம கிழ்ந்த                குருநாதா

      அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை

         அமளிந லங்கொள்               பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.